Friday, October 29, 2010

பதிவர்களும் பட்டாசுகளும்

நம்ம பதிவுலக நண்பர்களையும்,பட்டாசுகளையும் இணைத்து  ஒரு பதிவு எழுத திடிர்னு  ஐடியா கிடைத்தது.  சரின்னு எழுத ஆரம்பிச்ச பட்டாசு பேரு வரமாட்டுது உடனே வண்டியை எடுத்துட்டு பட்டாசு கடைக்கு போனேன் போய் எல்லா பெயர்களையும் வாங்கி .எந்த எந்த பட்டாசுக்கள் நம்ம பதிவர்களுக்கு பொருந்தும் என்று கீழ போட்டு இருக்கிறேன் .

                                                                                                                                                 

                                             



புஸ்வானம் முதலில் லைட்அ தான்  எறியும் அப்புறம்  நல்ல மெல்ல மெல்ல உயர போகும்.
நம்ம தேவா அண்ணாமாதிரி முதல்ல படிக்கும் பொழுது ஸ்லோவா புரியுற மாதிரி  இருக்கும் உள்ளே போக போக அதனின் அர்த்தம் தெரிந்ததும் நல்ல இருக்கும் .

பாம்பு மாத்திரை இது புகையும் ஒரு மாதிரி எறிந்த வாடை அடிக்கும் .ஆனால் இதனால் பயம் இல்லை .
நம்ம கோமாளி செல்வாமொக்கை என்கிற பெயரில் ஒரே புகைய கிளப்பி விட்ருவான் .யாருக்கும் பாதிப்பில்லாமல்.

டபுள் ஷாட் இது ரெண்டு தடவை சத்தம்  கொடுக்கும் ஒன்று கீழ இன்னொன்று மேல போய்  வெடிக்கும்
நம்ம அருண் சினிமா புதிர் போட்டு சாகடிக்கிறது.(கீழே காது கிழிய வெடிக்கிறது )மற்றொன்று தன அனுபவங்களை அழகாக எழுதி எல்லோரையும் ரசிக்க வைப்பது .(மேலே போய் வெடிக்கும் பொழுது காதுக்கு பாதிப்பு  இருக்காது ).

தரை  சக்கரம் இது எப்போதும் ஒரே மாதிரி தான் தரையில் சுற்றும் .இருந்தாலும் திடீர்னு வெடிச்சிரும்.
நம்ம பன்னி குட்டி ராமசாமி ஒரே மாதிரி எப்ப பார்த்தாலும் விஜய பத்தி அதிகமாக பதிவு எழுதுறது .ஆனாலும் திடீர்னு ராமர்பிள்ளை பற்றி எழுதி அசத்துவார் .

கம்பி மத்தாப்பு இதை பெண்களும் சிறுவர்களும் விரும்பி கொளுத்துவார்கள் பயமே இல்லாத ஒன்று
இது நம்ம சௌந்தர் (ரசிகன்)இவர் பதிவை எல்லோரும் படிக்கலாம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டார்

அணு குண்டு இது ஒன்னு வெடிச்சாலும் அந்த ஏரியாவே அதிரும் .காதில் ரத்தம் வரும் அளவுக்கு சத்தம்  இருக்கும் .
இது நம்ம டெர்ரர்.இவர் எப்பாவது ஒரு பதிவு தான் போடுவார் அந்த பதிவு பதிவுலகமே  இவரை பார்த்து பயப்படும் கமெண்ட்ஸ் ல எல்லோரையும் போட்டு அடிப்பார் .ஹி....ஹி ....சில சமயம் வேற ப்ளோக்ல போயும் காதுல ரத்தம் வர அளவுக்கு இவரு அடிவாங்குவாறு 

10000 வால சரவெடி ஒரு தடவ திரிய பத்த வச்சிட்டா போதும் சர சரவென வெடிச்சிகிட்டே இருக்கும் யாரும் கிட்ட போக முடியாது.
இது பட்டபாட்டி ஒரு பதிவு போடுவார் யாராவது  கமெண்ட்ஸ் எழுத கிட்ட போன அவ்வளவு தான் காதுல இருந்து ரத்தம் வரும் அளவுக்கு வசவு இருக்கும்

கேப் ரோல் இதை துப்பாக்கியில் லோட பண்ணியாச்சுன்ன அது பாட்டுக்கு டப்பு..... டப்பு ...ன்னு சுட்டு கிட்டே இருக்கும் .
இது நம்ம மங்குனி பதிவு மாதிரி சின்ன பதிவ தான் இருக்கும்.ஆனா கமெண்ட்ஸ் மட்டும் டப்பு..... டப்பு ...ன்னு சுட்டது மாதிரி விழுந்துகிட்டே இருக்கும்.

500 வால சரவெடி திரிய பத்த வச்சிட்டா சர சரவென வெடிக்கும் ஆனா உடனே அடங்கிடும் .
இது நம்ம வெங்கட் சின்ன பதிவா இருந்தாலும் நச்சுன்னு நல்ல இருக்கும் சீக்கிரம் எல்லோருக்கும் புரியும் படியான சிரிப்பு வெடியாகவும் இருக்கும்..

சாட்டை  இது மொத்தத்துக்கு  பயமே கிடையாது .யாருனாலும்  கொளுத்தலாம் அது பாட்டுக்கு எரிஞ்சிகிட்டே   இருக்கும்
இது நம்ம PSV இவர் பதிவ  எல்லோரும் படிக்கலாம்.யார் கமெண்ட்ஸ் போட்டாலும் சரி ,voteபோட்டாலும் சரி .அவர் கண்டுக்கவே மாட்டார்.அவரு பாட்டுக்கு எழுதிகிட்டே இருப்பார்.


புல்லெட் பாம் இது பார்க்குறதுக்கு சிறிய வெடி மாதரி தான் இருக்கும் ஆனா ரொம்ப பவர்புல் வெடி
இது நம்ம எஸ் .கே கமெண்ட்ஸ் எல்லாம் சும்மா பவர் புல்அ  இருக்கும் .கதை எழுதுவாரு பாருங்க .போரும்ல தான் எழுதுவார் செம ஹிட்(என் அன்பான வேண்டுகோள் எஸ்.கே நீங்க கண்டிப்பாக ப்ளாக்ல ஒரு கதை எழுதணும்).

ராக்கெட் இதுல திரிய பத்த வைச்ச விடனே வானத்தை நோக்கி போகும் அப்படியே காணமல் போய் விடும் .
இது நம்ம வெறும்பய பதிவ முதல் ரெண்டு பாரா நல்ல இருக்கும் கடைசி பார்த்தா சப்பை மேட்டர் மாதிரி பதிவ  முடிசிருவார்

சரி எல்லோருக்கும் தீபாவளி  வாழ்த்துக்கள் மக்கா ...

(எங்கேயோ இருந்து தேவா அண்ணா குரல் )டேய் தம்பி பாபு .ஏன்டா இப்படி இம்சை பண்ணுற .உன் "நண்பன்டாசிரிப்பு போலீஸ் அவனை பற்றி ஒன்னும் சொல்லாம போற ......

தேவா அண்ணா நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பேனா .இதோ

நமத்துபோன பட்டாசு இதுல  திரியா பத்தவச்ச உடனே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ன்னு சத்தம் கொடுக்கும் ஆனா வெடிக்காது
அதே மாதிரி தான் நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ்  (என்னத்த சொல்லுறது ) அதான் நமத்து போச்சே ........

Fancy shot  இது ரொம்ப காஸ்ட்லியான வெடிங்க .திரியா பத்த வச்சி விட்ட போதும் மேல போய் கலர்புல்அ வெடிக்கும் பாருங்க பார்த்துகிட்டே இருக்கலாம் ......
இது நம்ம இம்சை பாபு வோட பதிவு ....அத சொல்லுறதுக்குள்ள (ஏப்பா டெர்ரர் என் இப்படி கோவ படுற சரி விடுப்பா ...ஸ் ஸ் ஸ் ... அடிக்காதே ......பாருடா அதுக்குள்ள எவனோ கல் எடுத்து எரியுறான் .....சரி மக்கா விடுங்க .)

அடுத்து இந்த தீபாவளி ஸ்பெஷல் போன் வெடி. இது துபாய்ல இருந்து வெடிச்சாலும் இந்தியா வுக்கு கேக்கும் இதுல  என்ன ஸ்பெஷல்னா..............
ச்சே .து ...................இத நான் சொல்ல  கூடாதுன்னு பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொல்லிருக்கு .அவரே கமெண்ட்ஸ்ல வந்து சொல்லுவாரு .வா மக்கா நரி வந்து சொல்லு.

மீண்டும் ஒருவாட்டி எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

எல்லோரும் படித்து விட்டு கண்டிப்பாக ஓட்டு போடவும் . ஏக ஓட்டு பட்டைகள் நண்பர் அருண் எடுத்து வைத்து என்னோட ப்ளாக் அ அழகு படுத்தி தந்திருக்கார்.




70 comments:

dheva said...

தீபாவளி வாழ்த்துக்கள் தம்பி....

நல்லா பத்த வச்சு இருக்க எல்லாரையும்...செல்வா பாம்பு மாத்திரையா....!!!! இரு அவன டைம்பாம மாறி உனக்கு ஒரு எதிர்பதிவு போட வைக்கிறேன்...!

எல் கே said...

நல்லாதான்யா இருக்கு பதிவு.. ..

dheva said...

//இதை பெண்களும் சிறுவர்களும் விரும்பி கொளுத்துவார்கள் பயமே இல்லாத ஒன்று
இது நம்ம சௌந்தர் (ரசிகன்)இவர் பதிவை எல்லோரும் படிக்கலாம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டார் //

செளந்தர்.... பற்றி தெளிவா பத்த வச்சு இருக்க...!

மங்குனி அமைச்சர் said...

பாபு நல்லாத்தான்யா யோசிச்சு இருக்க , அப்படியே தீபாவளி சுவீட்டுக்கு ஒரு பதிவு போட்டுவிடு புண்ணியமா போகும்

இம்சைஅரசன் பாபு.. said...

நன்றி L .K

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது தரைச் சக்கரமா? எல்லாத்துக்கும் வெக்கிரேண்டி வேட்டு....!

மங்குனி அமைச்சர் said...

அது சரி இந்த தீப்பட்டின்னு ஒரு ஐட்டம் இருக்குமே அது யாரு ????

NaSo said...

எங்கள் போலீசே நமுத்த பட்டாசு என்று சொன்ன பாபு அவர்களுக்கு சிறப்பு பரிசு ஒன்று தீபாவளி அன்று அவருக்கு வழங்கப்படும்.

dheva said...

டேய்.. தம்பி...

ரெடியா வச்சிருக்க.. அந்த பெரிய பாம் எடு....சிரிப்பு போலிஸ் உடம்பு எல்லாம் சுத்து....இன்னியோட மேட்டர முடிச்சிடுவோம்....!

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது தரைச் சக்கரமா? எல்லாத்துக்கும் வெக்கிரேண்டி வேட்டு....!//

மாம்ஸ் ரொம்ப பெரிய வேட்டா வைங்க.

NaSo said...

//dheva said...

டேய்.. தம்பி...

ரெடியா வச்சிருக்க.. அந்த பெரிய பாம் எடு....சிரிப்பு போலிஸ் உடம்பு எல்லாம் சுத்து....இன்னியோட மேட்டர முடிச்சிடுவோம்....!

//

தேவா சார் இதுக்கு நானும் உதவலாமா?

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் மங்குனி தீப்பட்டி எடுத்து எங்கயாவது பத்த வச்சிராத

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி, அப்பிடியே எண்ண தேச்சி குளிக்கிறது, சாப்புடறது, டீவி பாக்குறதுன்னு எல்லா மேட்டரையும் கவர் பண்ணுங்க...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாரையா என்ன கலாயிசிருக்கிறது... இரு சிரிப்பி போலீச கூட்டிட்டு வரேன்..

இம்சைஅரசன் பாபு.. said...

//யாரையா என்ன கலாயிசிருக்கிறது... இரு சிரிப்பி போலீச கூட்டிட்டு வரேன்//

சிரிப்பு போலீஸ் நமத்து போன போஸ்ட் (நமத்து போன வெடி )

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்குங்க! எல்லோரையும் நல்லா எழுதியிருக்கீங்க!
தீபாவளி வாழ்த்துக்கள்!
(கதை, மற்ற விசயங்கள் எழுதணும்னு ஒரு புது பிளாக் ஆரம்பிச்சுருக்கேன்!
http://ethuvumnadakkalam.blogspot.com/ )

NaSo said...

//வெறும்பய said...

யாரையா என்ன கலாயிசிருக்கிறது... இரு சிரிப்பி போலீச கூட்டிட்டு வரேன்..//

உங்க ரெண்டு பேரையும் தான் வலை விரிச்சி தேடிட்டு இருக்காங்க.

அருண் பிரசாத் said...

பதிவு பட்டாசு!

கலக்கிட்டீங்க பாபு....


@ எஸ் கே

புது பிளாக் ஓபன் செய்தா சொல்லுறது இல்லையா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இது பட்டபாட்டி//

அவர் எப்ப பாட்டி ஆனான்னு மூதேவி அது பட்டாப்பட்டி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் நான் தீப்பெட்டி. நான் இல்லன்னா ஒரு பட்டாசு கூட பத்த வைக்க முடியாது.

பத்த வச்சுட்டியே பரட்டை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
புஸ்வானம் முதலில் லைட்அ தான் எறியும் அப்புறம் நல்ல மெல்ல மெல்ல உயர போகும்.
நம்ம தேவா அண்ணா மாதிரி முதல்ல படிக்கும் பொழுது ஸ்லோவா புரியுற மாதிரி இருக்கும் உள்ளே போக போக அதனின் அர்த்தம் தெரிந்ததும் நல்ல இருக்கும் .//

சில நேரம் புஸ்ஸுன்னு போயிடும். அது மாதிரி சில நேரம் சுத்தமா புரியாது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
பாம்பு மாத்திரை இது புகையும் ஒரு மாதிரி எறிந்த வாடை அடிக்கும் .ஆனால் இதனால் பயம் இல்லை .
நம்ம கோமாளி செல்வா மொக்கை என்கிற பெயரில் ஒரே புகைய கிளப்பி விட்ருவான் .யாருக்கும் பாதிப்பில்லாமல்.//

பாம்பு மாத்திரை பயங்கரமா நாறுமே. அது மாதிரி செல்வா நாத்தம் புடிச்சவன்னு சொல்ல வரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
டபுள் ஷாட் இது ரெண்டு தடவை சத்தம் கொடுக்கும் ஒன்று கீழ இன்னொன்று மேல போய் வெடிக்கும்
நம்ம அருண் சினிமா புதிர் போட்டு சாகடிக்கிறது.(கீழே காது கிழிய வெடிக்கிறது )மற்றொன்று தன அனுபவங்களை அழகாக எழுதி எல்லோரையும் ரசிக்க வைப்பது .(மேலே போய் வெடிக்கும் பொழுது காதுக்கு பாதிப்பு இருக்காது ).//

அது சரி வீட்டுல wife கிட்டயும் ஆபீஸ் ல மேனேஜர் கிட்டயும் அடி வாங்குறாரே அதைதான சொன்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
தரை சக்கரம் இது எப்போதும் ஒரே மாதிரி தான் தரையில் சுற்றும் .இருந்தாலும் திடீர்னு வெடிச்சிரும்.
நம்ம பன்னி குட்டி ராமசாமி ஒரே மாதிரி எப்ப பார்த்தாலும் விஜய பத்தி அதிகமாக பதிவு எழுதுறது .ஆனாலும் திடீர்னு ராமர்பிள்ளை பற்றி எழுதி அசத்துவார் .//

தரைல இருக்குற மண்ணும் பன்னிகுட்டி தலைல இருக்குற மண்ணும் ஒண்ணா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
கம்பி மத்தாப்பு இதை பெண்களும் சிறுவர்களும் விரும்பி கொளுத்துவார்கள் பயமே இல்லாத ஒன்று
இது நம்ம சௌந்தர் (ரசிகன்)இவர் பதிவை எல்லோரும் படிக்கலாம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டார்//

கடைசில கம்பிய தூக்கி குப்பைல போடுவாங்க. அது மாதிரி சௌந்தர் அவர்களை.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
அணு குண்டு இது ஒன்னு வெடிச்சாலும் அந்த ஏரியாவே அதிரும் .காதில் ரத்தம் வரும் அளவுக்கு சத்தம் இருக்கும் .
இது நம்ம டெர்ரர்.இவர் எப்பாவது ஒரு பதிவு தான் போடுவார் அந்த பதிவு பதிவுலகமே இவரை பார்த்து பயப்படும் கமெண்ட்ஸ் ல எல்லோரையும் போட்டு அடிப்பார் .ஹி....ஹி ....சில சமயம் வேற ப்ளோக்ல போயும் காதுல ரத்தம் வர அளவுக்கு இவரு அடிவாங்குவாறு
//
இதுதான் கரெக்ட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
கேப் ரோல் இதை துப்பாக்கியில் லோட பண்ணியாச்சுன்ன அது பாட்டுக்கு டப்பு..... டப்பு ...ன்னு சுட்டு கிட்டே இருக்கும் .
இது நம்ம மங்குனி பதிவு மாதிரி சின்ன பதிவ தான் இருக்கும்.ஆனா கமெண்ட்ஸ் மட்டும் டப்பு..... டப்பு ...ன்னு சுட்டது மாதிரி விழுந்துகிட்டே இருக்கும்.//

எனது மங்குனி கேப்மாரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
500 வால சரவெடி திரிய பத்த வச்சிட்டா சர சரவென வெடிக்கும் ஆனா உடனே அடங்கிடும் .
இது நம்ம வெங்கட் சின்ன பதிவா இருந்தாலும் நச்சுன்னு நல்ல இருக்கும் சீக்கிரம் எல்லோருக்கும் புரியும் படியான சிரிப்பு வெடியாகவும் இருக்கும்..//

சரியான அருந்த வாலு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
சாட்டை இது மொத்தத்துக்கு பயமே கிடையாது .யாருனாலும் கொளுத்தலாம் அது பாட்டுக்கு எரிஞ்சிகிட்டே இருக்கும்//

மொக்கையா சாட்டை அடி அடிக்கிறாரே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

ராக்கெட் இதுல திரிய பத்த வைச்ச விடனே வானத்தை நோக்கி போகும் அப்படியே காணமல் போய் விடும் .
இது நம்ம வெறும்பய பதிவ முதல் ரெண்டு பாரா நல்ல இருக்கும் கடைசி பார்த்தா சப்பை மேட்டர் மாதிரி பதிவ முடிசிருவார்//

காணாம போகாது பரங்கிமலை ஜோதிக்கு போகும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நமத்துபோன பட்டாசு இதுல திரியா பத்தவச்ச உடனே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ன்னு சத்தம் கொடுக்கும் ஆனா வெடிக்காது
அதே மாதிரி தான் நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ் (என்னத்த சொல்லுறது ) அதான் நமத்து போச்சே ........//

ஆமா நிறைகுடம் தளும்பாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
Fancy shot இது ரொம்ப காஸ்ட்லியான வெடிங்க .திரியா பத்த வச்சி விட்ட போதும் மேல போய் கலர்புல்அ வெடிக்கும் பாருங்க பார்த்துகிட்டே இருக்கலாம் ......
இது நம்ம இம்சை பாபு வோட பதிவு ....அத சொல்லுறதுக்குள்ள (ஏப்பா டெர்ரர் என் இப்படி கோவ படுற சரி விடுப்பா ...ஸ் ஸ் ஸ் ... அடிக்காதே ......பாருடா அதுக்குள்ள எவனோ கல் எடுத்து எரியுறான் .....சரி மக்கா விடுங்க .)//

இருடி தீபாவளிக்கு ஊருக்கு வரும்போது உன் பின்னாடி திரிய வச்சு பத்த வைக்கிறேன்.

சௌந்தர் said...

கம்பி மத்தாப்பு இதை பெண்களும் சிறுவர்களும் விரும்பி கொளுத்துவார்கள் பயமே இல்லாத ஒன்று
இது நம்ம சௌந்தர் (ரசிகன்)இவர் பதிவை எல்லோரும் படிக்கலாம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டார்///

ஆமா ஆமா நான் ஏழைகள் கைகளிலும் பணக்காரன் கைகளிலும் சரி சமமா இருப்பேன்..! உங்களை மாதிரி இல்லை..!

Anonymous said...

அட..பட்டாசு கிளப்பிட்டீங்க

எஸ்.கே said...

@அருண்
புதுசா ஒரு போஸ்ட் போட்டுட்டு எல்லோருக்கும் சொல்லாம்னு இருந்தேங்க! 2 நாளா ரொம்ப காய்ச்சல்! கம்ப்யூட்டர் பக்கமே வரலை! அதான்!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

வந்துட்டேன் ..............,மக்கா வந்துட்டேன்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தல கொஞ்சமா ஆணியை புடுங்கி கடாசிட்டு வரேன் ,,,இருங்க

( ஆமா மங்கு இந்த பதிவுல தனிமனித தாக்குதல் அதிகமா இருக்கே ...,பஞ்சயாத்த கூட்டலாம ...,சீக்கிரம் சொல்லு சின்ராசு வேற வெளிய போயிருக்கான் ) :)))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
தல கொஞ்சமா ஆணியை புடுங்கி கடாசிட்டு வரேன் ,,,இருங்க

( ஆமா மங்கு இந்த பதிவுல தனிமனித தாக்குதல் அதிகமா இருக்கே ...,பஞ்சயாத்த கூட்டலாம ...,சீக்கிரம் சொல்லு சின்ராசு வேற வெளிய போயிருக்கான் ) :)))))
////////

தனிமனித தாக்குதல்னா, மூத்திர சந்துல வெச்சி மூச்சுத் திணற திணற அடிக்கறதுதானே?

இம்சைஅரசன் பாபு.. said...

மக்க நரி வந்த வுடனே பத்த வைக்கிரேயா

சௌந்தர் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
தல கொஞ்சமா ஆணியை புடுங்கி கடாசிட்டு வரேன் ,,,இருங்க

( ஆமா மங்கு இந்த பதிவுல தனிமனித தாக்குதல் அதிகமா இருக்கே ...,பஞ்சயாத்த கூட்டலாம ...,சீக்கிரம் சொல்லு சின்ராசு வேற வெளிய போயிருக்கான் ) :))))/////


சொல்லுங்க சொல்லுங்க பாபு உங்களை என்ன பண்ணார்

இம்சைஅரசன் பாபு.. said...

சௌந்தர் அது நரியே வந்து சொல்லும் ........போன் வெடி எப்படி வெடிக்கும் என்று .........நான் சொன்ன என்ன வந்து கடிச்சி வைசிருவேன்னு சொல்லிறுக்காறு

சௌந்தர் said...

இருந்தாலும் நீங்க நரியை அப்படி சொல்லி இருக்க கூடாது.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்கலா

பட்டாசு said...

எல்லா பட்டாச பத்தியும் சொன்னீங்க இந்த ஒரிஜினல் பட்டாச பத்தி ஒன்னும் சொல்லலியே நண்பா.
எல்லாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். பட்டாச பார்த்து வெடிங்க, சந்தோசமா இருங்க.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

@ சௌந்தர்
//// சொல்லுங்க சொல்லுங்க பாபு உங்களை என்ன பண்ணார் ////

அது வந்து ...அது வந்து ...,இந்த ஜீரோ வாட்ஸ் பல்பு இல்ல அதை போன் மூலமா கொடுத்துட்டாரு ,,,

செல்வா said...

என்னாது நான் பாம்பு மாத்திரையா ..?
சரி சரி .. அதப் பத்தி ஏதாவது பெருமையா சொல்லுறேன் இருங்க ..!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யாரவது இருக்கீங்களா ?

செல்வா said...

// பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
யாரவது இருக்கீங்களா ?

//

நான் இருக்கேங்க ..!!

செல்வா said...

49

செல்வா said...

50

இம்சைஅரசன் பாபு.. said...

.
நரி வாயா

வெங்கட் said...

// 500 வால சரவெடி திரிய பத்த வச்சிட்டா
சர சரவென வெடிக்கும் ஆனா உடனே
அடங்கிடும். இது நம்ம வெங்கட் //

ஹி., ஹி., ஹி..!!

நல்லவேளை சின்னதா பதிவு
எழுதறேன்னு " ஊசி பட்டாசுன்னு "
சொல்லாம போனீங்க..

Nice.. Very Nice..!!

கருடன் said...

@இம்சை

பட்டாசாக பதிவு எழுதிய பாபு அவர்கள் வாழ்க. மிக அருமையான பதிவு மிகவும் ரசித்தேன்.. நன்றி!!

(பாபு மக்கா நீ சொன்ன மாதிரி கமெண்ட் போட்டேன்... இரு போய் சப்பிட்டு வரேன்.. )

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//இது பட்டபாட்டி//

அவர் எப்ப பாட்டி ஆனான்னு மூதேவி அது பட்டாப்பட்டி
//

யோவ்.. ரமேஸு.. ஒழுக்க ம%$ரா, எங்க கமா போடனுமுனு சொல்லு...

என்னைய திட்றயா.. இல்ல திருத்துறியா?...


( ஒருவேளை வாத்தியார் பையனா இருப்பியோ?)) ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ன்... இரு போய் சப்பிட்டு வரேன்.. )
//

நீ போ ராசா..

ஆமா யாரை?....ஹி..ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டாபட்டி.. said...

//இது பட்டபாட்டி//

அவர் எப்ப பாட்டி ஆனான்னு மூதேவி அது பட்டாப்பட்டி
//

யோவ்.. ரமேஸு.. ஒழுக்க ம%$ரா, எங்க கமா போடனுமுனு சொல்லு...

என்னைய திட்றயா.. இல்ல திருத்துறியா?...


( ஒருவேளை வாத்தியார் பையனா இருப்பியோ?)) ஹி..ஹி///


நான் வாத்தியார் பையன்னு உனக்கு எப்படி தெரியும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

பட்டாசாக பதிவு எழுதிய பாபு அவர்கள் வாழ்க. மிக அருமையான பதிவு மிகவும் ரசித்தேன்.. நன்றி!!

(பாபு மக்கா நீ சொன்ன மாதிரி கமெண்ட் போட்டேன்... இரு போய் சப்பிட்டு வரேன்.. )//


லாலி பப்பா மச்சி?

பெசொவி said...

//மங்குனி அமைசர் said...
அது சரி இந்த தீப்பட்டின்னு ஒரு ஐட்டம் இருக்குமே அது யாரு ????//

பத்த வச்சுட்டியே பரட்ட!

கருடன் said...

@பட்டா

//நீ போ ராசா..

ஆமா யாரை?....ஹி..ஹி//

அட நாதரி பயல!! போரம்ல கேக்க வேண்டிய கேள்வி இப்படி பப்ளிக்கா கேக்கர... அது சாப்பிட்டுயா... பசி மயக்கத்துல ஜஸ்ட் மிஸ்... கொஞ்சம் ஏமாந்தா குனிய வச்சி... கும்மிடுவிங்களே...

கருடன் said...

@ரமேசு

//லாலி பப்பா மச்சி?//

ஐ டூ லவ் யு மச்சி!!

(நல்லவேளை டீசண்டா கேட்ட...)

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்,மிடி ஃபார் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

இண்ட்லில 18 வது ஓட்டு என்னுது,என் வயசும் 18 ஆஹா என்ன ஒற்றுமை

சி.பி.செந்தில்குமார் said...

//
டபுள் ஷாட் இது ரெண்டு தடவை சத்தம் கொடுக்கும் ஒன்று கீழ இன்னொன்று மேல போய் வெடிக்கும்
நம்ம அருண் சினிமா புதிர் போட்டு சாகடிக்கிறது.(கீழே காது கிழிய வெடிக்கிறது )மற்றொன்று தன அனுபவங்களை அழகாக எழுதி எல்லோரையும் ரசிக்க வைப்பது .(மேலே போய் வெடிக்கும் பொழுது காதுக்கு பாதிப்பு இருக்காது ).//

அது சரி வீட்டுல wife கிட்டயும் ஆபீஸ் ல மேனேஜர் கிட்டயும் அடி வாங்குறாரே அதைதான சொன்ன?

October 29, 2010 11:06 PM
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
தரை சக்கரம் இது எப்போதும் ஒரே மாதிரி தான் தரையில் சுற்றும் .இருந்தாலும் திடீர்னு வெடிச்சிரும்.
நம்ம பன்னி குட்டி ராமசாமி ஒரே மாதிரி எப்ப பார்த்தாலும் விஜய பத்தி அதிகமாக பதிவு எழுதுறது .ஆனாலும் திடீர்னு ராமர்பிள்ளை பற்றி எழுதி அசத்துவார் .//

தரைல இருக்குற மண்ணும் பன்னிகுட்டி தலைல இருக்குற மண்ணும் ஒண்ணா?


யோவ் இது ஓவர் பன்னி பார்த்தா அவர் மனசு எவ்வளவு வேதனைப்படும்?(அப்படியே வேதனைப்படலைன்னாலும் நங்க பட வெச்சுடுவோம்ல?-0)

அன்பரசன் said...

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

Chitra said...

தீபாவளி வாழ்த்துக்கள்! பட் படார்!

அந்நியன் said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

Kousalya Raj said...

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

elamthenral said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

சி.பி.செந்தில்குமார் said...

பாபு ,பதிவு போடலைய்யா?

Unknown said...

தீபாவளி வாழ்த்துக்கள்.....