அண்ணன் லவ் மூடுல இருக்கேன் ..தக்காளி... பன்னிகுட்டி இன்னும் பல பேர் ஒரே காதல் கதை போட்டு தள்ளுறாங்க நானும் என் காதல கதைய எழுதுறேன் ..பார்த்து படிச்சு செத்து தொலைங்க ...
என் ஜைன்தவி ...(சைந்தவி இல்ல) என் பட்டு குட்டி ,என் செல்ல குட்டி காலைல எழுந்தவுடன் டீ குடிக்கும் பொழுது..! நான் குடிச்சிட்டு கொஞ்சம் டீ உனக்கு தருவேனே..! அந்த எச்ச டீயை நீ குடிச்சுட்டு நீ என் மடி மீது வந்து படுத்து ..என் கன்னத்தில் வந்து ..சீ ..சீ எனக்கு வெக்கம் வெக்கமாக வருது அதை சொல்ல ..
சாபுவுக்கு லீவ்ன்னு சொல்லிட்டு ஜைன்தவியையும் கூட்டிட்டு போயீட்ட ..நான் எப்போதுமே ரெண்டு இட்லி சாப்பிட்டுகிட்டு ஒரு இட்லி தந்தாலும் அதை நல்ல வயிறு முட்ட சாப்பிட்டுகிட்டு ,நான் வேலைக்கு போகும் போது வெளியே வந்து வழி அனுப்பி வைப்பியே...இந்த 15 நாளும் எனக்கு ஒரே போர் ..எப்படி எனக்கு இனி நேரம் போகும் ..
வாழ்க்கை அழகு பாஸ்...அதுவும் ஜைந்தவிங்க கெடைச்ச எல்லா அப்பாகளுக்கும் வாழ்க்கை சொர்க்கம்.(இந்த வரி எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே ..டேய் இம்சை வெளிய வராத அப்படியே உள்ள இரு ..)
யார்கிட்டேயும் பேச பிடிக்கல ... ஜைன்தவி பார்க்காம கண்ணு ரெண்டும் பூத்து போச்சு ..என் கண்ணுகுள்ளே வந்து நிக்கிறியே ..உன் கூட செல்ல சண்டை போடணும் போல இருக்கு ..இப்படி தான் என் மாமனார் எனக்கு தீபவாளிக்கு வாங்கி தந்த பட்டாபட்டிய .நான் கழற்றி போட்டு இருந்த போது அதை நீ எடுத்து போத்திகிட்டு படுத்தியே..! குளிருக்கு இதமா இருக்குன்னு ..நான் கோவமா அதை புடுங்கும் போது ..நீ அதை இழுக்க ..நான் இழுக்க... கடைசில .பட்டாபட்டி பாதி உன்கிட்ட மீதி என்கிட்டே இருந்துச்சு ..கிளிச்சுட்டீயேன்னு நான் பொய் கோவ பட்ட போதும் என் மடில வந்து படுத்தியே... .இந்த பதினைந்து நாளும் என் மடில படுக்க ஆள் இல்லாமல் தலையணை தூக்கி வைச்சிக்கிட்டு இருக்கேனே இந்த கொடுமை ரொம்ப பயங்கரமானது .
இப்படிதாங்க நானும் ஜைந்தவியும் எப்பொழுதும் மாலை நடை பயிற்சி போவோம் .அவளின் பிடி என் கைகுள்ளேயே இருக்கும் அது அன்பு பிடி..! .ஒரு நாள் இப்படி சேர்ந்து வாக்கிங் போகும் போது நாலு பேர் சேர்ந்து முறைச்சி பார்த்தாங்க .எனக்கு கோபம கொப்பளித்து கொண்டு வந்தது நான் அவர்களை அடிக்க போகும் முன் ..என் செல்லம் ,என் புச்சு குட்டி அவர்களை முறைத்து பார்த்து சத்தம் போட்டாளே பார்க்கணும் ..அது என் செவிக்குள்ளேயே நிக்குது ..
ஒரு நிமிஷம் இருங்க சாபுகிட்டே என் செல்ல குட்டி ,அம்முக்குட்டி ஜைன்தவி சாப்பிட்டாளா என்னன்னு கேட்டு கிட்டு வரேன் ஏன்னா நான் சாப்பிட்ட மிச்சத்தை சாப்பிட்டே பழக்க பட்டவள் ..
ஜைன்தவி கிடச்ச அப்பாக்களுக்கு... நீங்களும் வீட்டுல இருக்கும் ஜைந்தவிக்கு ஒரு துண்டு இட்லி ,ரொட்டி, எச்ச டீ இப்படி டெய்லி கொடுத்து பாருங்க ..அதோட சுகமே தனி மக்கா ..
ஜைன்தவி கிடைக்காத பன்னாட பரதேசிகளுக்கு ..இழுத்து மூடிக்கிட்டு பொத்திகிட்டு படுத்து தூங்குங்க... ஒரு மாலதி ,ஒரு சந்தியா... இப்படி கெட்ட கெட்ட கனவு வரும் ...
இருங்க ..இருங்க ..டெர்ரர் எதோ கேக்குறான் ..
ஓ ...ஜைன்தவி யாருன்னு கேக்குறியா பாஸ் இதோ ....
(பட்டாபட்டி ப்ளாக்ல சுட்டது ...)
ஜைன்தவி என் வீட்டு நாய்க்குட்டி ..நான் குடிச்ச எச்சி டீ குடிக்கலைனா அதுக்கு தூக்கம் வராது ,என் பட்டாபட்டி எடுத்து மூடிக்கிட்டு தான் அது படுத்து தூங்கும் ..மாதம் ஒரு பட்டாபட்டி என் மாமனார் அதுக்காகவே வாங்கி தருகிறார் ..வாக்கிங் போகும் போது நாலு தெருபொருக்கி நாய்கள் அத பின் தொடரும் போது அது விடும் சவுண்ட் ...ஹையோ ..ஹியூ ..அத சொல்ல முடியாது ..என் காதில் தேன் வந்து பாயுது .
டிஸ்க்கி :இது என் பதிவுலக ரோல் மாடல் பட்டாபட்டிக்கு சமர்பிக்குறேன் ...தலைவா நீ கோடு தான் போட்ட ..நான் ரோடே போட்டுட்டேன் . ஹி ..ஹி ..






