சண்டே என் பொண்ணு வீட்டுல இருந்தாள் (பெரிய கண்டுபிடிப்பு சண்டேன்னா. லீவ் தான் குழந்தைங்க வீட்டுல தான் இருப்பாங்க ).என் வீட்டுக்கு கெஸ்ட் வந்திருந்தாங்க .எல்லோரும் மத்தியானம் சாப்ட்டுட்டு போய்ட்டாங்க .என் பொண்ணு வீட்டுல இருந்த செம்பருத்தி செடியில் இருந்து பூ எடுத்து வைச்சு சில படங்கள் மேல சொருகி வைச்சிருந்தா .திடிர்னு ரெண்டு பேப்பரை சின்ன உருண்டையா உருட்டி தன்னோட தலைய மூணு தடவை சுத்தினாள் .பின்பு மூன்று முறை அதன் மீது துப்பினாள் பின்னர் அதை சாமிக்கு தீபாரதானை காண்பிப்பது போன்று காட்டினாள்
என் பொண்ணை பார்த்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் ..........
நான் : என்ன மக்கா செய்கிற ...........
என் மகள்:நீங்களும் அம்மாவும் சாமி கும்பிடும் பொழுது அந்த டப்பால இருந்து சூடம் எடுத்து என்ன செய்வீங்களோ அது தான் செய்யுறேன் ....
நான் :அப்பா சாமி கும்பிடும் போது சூடம் எடுத்து தலைய எப்ப மக்கா சுத்தினேன் அதுவும் நீ துப்புர. சாமிக்கு துப்பினதை யாராவது கொளுத்துவார்களா ?என்றேன்...........
என் மகள:(என் வீட்டமாவை பார்த்து)அம்மா நைட் சூடம் எடுத்து என் தலைய சுத்தி ....துப்ப சொல்லி தானே கொளுத்துவாங்க .......
நான் : பல்பு!!!!!!!!!
இருந்தாலும் நான் புத்திசாலி ஆயீற்றே (டாய் எவண்டா அங்க சிரிக்கிறது)........திரும்பவும் அது அதுக்கு இல்ல மக்கா அது உனக்கு திருஷ்ட்டி விழுந்திர கூடாதுன்னு அம்மா அப்படி செய்வாங்க .....சாமிக்கு அப்படி செய்ய கூடாது என்ன மக்கா .............
என் மகள்:சரிப்பா ..........திருஷ்ட்டின்னா என்னப்பா?
நான் : பல்பு !!!!!!!!!!!
என் மனைவி:அது வந்து இன்னைக்கு வீட்டுக்கு கெஸ்ட் வந்தாங்க இல்ல....உன்னை பார்த்து முடி நல்ல இருக்கு ........நீ நல்ல பேசுற இப்படி கண்ணு போட்டுருவாங்க .....அதை தான் திருஷ்ட்டின்னு சொல்லுவாங்க
என் மகள்:கண்ணு எப்படி அம்மா போடா முடியும் .....அது தான் கீழ விழாதே.........
நானும் என் மனைவியும்: பல்பு !!!!!!!!!!!
ஒரு நாள் வீட்டுல இருந்ததுக்கு எத்தனை பல்பு வாங்குறது.............. முடியாது சாமீ ...............




