Friday, November 26, 2010

சிரி............ சிரி...............

நீங்க லவ் பண்ண இந்த msg அ படி .

1 .நீ மெலடி சாங் கேட்க்க ஆசை படுவ
2 .உன் லவர் நேம் எங்கயாவது பார்த்தா ஸ்டாப் ஆகிடுவ ...........
3 .உன் நண்பர்கள் உன்னை டீஸ் பண்ணினா கோப பட மாட்டாய்........
4 .மெதுவாக நடப்பாய்.............
6 .மழை துளி விழுவதை ரசிப்பாய்............

7 .இயற்கையை ரசிப்பாய் .............
8 .இந்த msg ல ஐந்தாவது பாயிண்ட் மிஸ் ஆனத கவனிச்சிருக்க மாட்ட..........
9 இப்போ உன் முகத்தில் ஒரு புன் சிரிப்பு தெரியும் ............
10 .கண்டிப்பாக நீ யாரையோ லவ் பண்ணுறீங்க ...........

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  
Question paper அ பார்த்து நம்ம அழுதா அது அவமானம் .............
Answer paper அ பார்த்து professor அழுதா அது சரித்திரம் ............
= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

MOTHER பிரச்சனையா ?
M .குமரன் S /O மஹாலக்ஷ்மி பாரு.
FATHER பிரச்சனையா ?
சந்தோஷ் சுப்ரமணியம் பாரு
SISTER பிரச்சனையா ?
பாச மலர் பாரு .
BROTHER பிரச்சனையா ?
வானத்தை போல பாரு .
லவர் அண்ணன் பிரச்சனையா ?
ரன் பாரு .
லவர் ஏ பிரச்சனையா ?
அவ தங்கச்சிய பாரு ............

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  
 STUDYING ,READING என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது..............
SLEEPING ,PLAYING என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் ......................
by
EXAM HALL இல் படுத்து யோசிப்போர் சங்கம்
= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

எறும்புக்கும் கொசுவுக்கும் கல்யாணம்
முதல் இரவில் கொசு வெளியே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருந்தது .....
அப்போ கொசுவோட freind வந்து
ஏன்டா மச்சி வெளிய வந்து இருக்குற ன்னு கேட்டுச்சு
அதுக்கு மாப்பள கொசு சொல்லிச்சு "சிறிக்கி மவ உள்ள GOOD NIGHT போட்டுட்டு
தூங்குறாட மச்சி "

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  
அப்பா :ஏன்டா சொல் பேச்சு கேட்க்க மட்டுற ...........
மகன் :நீங்க சொல்லுறதெல்லாம் கேட்க்க முடியாது
 இப்ப நானும் சம்பாதிக்கிறேன் ........
அப்பா :உனக்கு நாலு மாடு வாங்கி கொடுத்தது தப்பா போய்டுச்சி ...........
உன்னை எல்லாம் BSC ,BE ,MSC ,MBA ,MCA ன்னு படிக்க வைச்சு தெரு தெருவா
அலைய விட்டு இருக்கணும்
= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

பெண்களின் கண் அசைவுக்கு 1000 அர்த்தம் இருக்கும் ............
ஆனால் உண்மையான நண்பனின் கண் அசைவுக்கு ஒரே அர்த்தம் "மச்சி சூப்பர்
பிகுரு வருது டக்குன்னு திரும்பிறதே " HOW IS IT
= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

டெர்ரர் கவிதை :
சூரியனை சுற்றினால் வெந்து போவீர்கள் ...........
சுடிதாரை சுற்றினால் நொந்து  போவீர்கள் ..........

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

டீச்சர் : நீ பெரியவன் ஆகி என்ன பண்ண போற ?
மாணவன் :கல்யாணம்
டீச்சர் : அது இல்ல நீ என்னவா ஆக விரும்புற ?
மாணவன்: கணவன்
டீச்சர் : நோ . அது இல்லை வாழ்கையில் உனக்கு என்ன கிடைக்கும்னு எதிர் பார்க்குற
மாணவன்:மனைவி
டீச்சர் : நோ .உங்க பெற்றோர்களுக்கு என்ன பண்ண போற ?
மாணவன்:மருமகள் தேடுவேன்
டீச்சர் :ஸ்டுபிட் ,உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்க்கிறாங்க ?
மாணவன்: பேர குழந்தைகள்
டீச்சர் :ஐயோ .உன் வாழ்க்கை லட்சியம் தான் என்ன ?
மாணவன் : நாம் இருவர் .நமக்கு இருவர்

= = =  = = = = = = = = = = = = = = = == = = = = == = = = =  

ஒரு பையன் பரீட்சை அறையில் question paper வாங்கி விட்டு பாடின பாட்டு

அந்த நேரம் அந்தி நேரம் ,கண் பார்த்து காதலாகி , போன நேரம் ஏதோ ஆச்சி ,
ஓஹ question பேப்பர் கையில் வந்தச்சு ,அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சு ,
ஹோசன்ன ......
என் பெஞ்சை தாண்டி போனாளே ,ஹோசன்னே answer ஒன்றும் சொல்லாமலே ,
நான் மெண்டல் ஆகிறேன் ,சுக்கு நூராகிறேன் ,
த இட்
அவள் போன பின்பு ,எந்தன் பிட்டை தேடி போகிறேன்

= = = = = = = = = = = = = = = = = = = == = = == = = = = =

குறிப்பு :இந்த  SMS ஜோக்ஸ் எனக்கு வந்தது கிடையாது .............................

Sunday, November 21, 2010

காக்கா





இன்னைக்கு காலைல ஒரு 6மணி இருக்கும் எந்திருச்சி பல் துலக்கிட்டு இருந்தேன். என்னோட குட்டி பொண்ணும் பக்கத்துல இருந்தா .வீட்டுக்காரம்மா துணி துவச்சி கிட்டு இருந்தாங்க. நேத்து இரவு முழுவதும் நல்ல மழை. கரண்ட் கம்பில நிறைய காக்கா இருந்துச்சு. அந்த காக்கா கூட்டத்தில ஒரு குஞ்சு காக்கவும் இருந்துச்சு. நான் எப்பவுமே புத்திசாலின்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க (டேய் யாருடா அங்க சிரிக்கிறது ......பிச்சு புடுவேன் பிச்சு ).


நான் ஒரு ஆர்வகோளறு உள்ளவன்னு உங்க எல்லோருக்கும் தெரியும். அந்த ஆர்வக்கோளாறு காரணமா என் பொண்ண தூக்கி வச்சுக்கிட்டு. மக்கா அங்க பாரு ஒரு குஞ்சு காக்கா இருக்குன்னு என் பொண்ணுக்கு காண்பித்து கொடுத்தேன்.அவளும் இவ்வளவு நாளா பெரிய காக்கா தான் பார்த்திருக்கா ஆதனால குஞ்சு காக்காவ சந்தோசமா பார்த்திட்டிருந்தவ .. திடீர்ன்னு

என் மகள் : அப்பா அந்த பெரிய காக்கா என்ன செய்யுது ?

நான் :அது தன் குட்டி புள்ளைக்கு சோறு ஊட்டுதுடா செல்லம்..
(காக்கா தன்  அலகில் இருந்த உணவை குஞ்சு காக்காக்கு கொடுத்துட்டு இருந்துச்சு )

என் மகள் :அப்பா இது அப்போ அம்மா காக்கா தானே ?

நான் :ஏன் அப்படி கேக்குற மக்கா

என் மகள் :அம்மா தானே எனக்கு சோறு ஊட்டுவாங்க........ அதனால அதுவும் அம்மா காக்காவா தானே இருக்கும்..

நான் : ஆமாடா செல்லம்.


என் மகள் : ஆமாப்பா இதுல எது அப்பா காக்கா?..........


நான் :????????????பல்பு !!!!!!(யாராவது சிரிச்சிங்கன்னா எனக்கு கெட்ட கோவம் வரும் )


நான் என் வீட்டம்மாவ   பார்த்தேன்... என் வீட்டம்மாவ கோவமா என்னை பார்த்து.. ஏங்க உங்களுக்கு காலையிலையே இதெல்லாம் தேவையா... போங்க சீக்கிரம் போய் பல் தேச்சிட்டு எடத்த காலி பண்ணுங்க. அப்படீன்னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு உள்ள போயிட்டா........

எனக்கு இன்னும் சந்தேகம் தீரல.......காக்கால எது ஆண் காக்கா ....எது பெண் காக்கான்னு எப்படி கண்டு பிடிக்கிறது ...

யாருல அங்கே ஓடி போறது...ஒழுங்கா பதில் சொல்லிட்டு போங்க..

Tuesday, November 16, 2010

தி பாஸ்

சினிமா உலகத்தை பொறுத்த வரையில் இந்த தலைப்புக்கு உரியவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தான்.
இந்த பதிவை எழுத எனக்கு வாய்ப்பளித்த சிரிப்புபோலீஸ் க்கு முதல நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் அன்பு மிரட்டல் விட்ட நண்பர் அருண்பிரசாத் ,அடிகடி ஞாபக படுத்திய சௌந்தர் எல்லோருக்கும் நன்றி ......



நான் முதல் முதலில் ரஜினி படம்ன்னு பார்த்தது மாவீரன் தான் 5வகுப்பு படிக்கும் பொழுது பார்த்தது .இந்த படம் பார்த்தாலும்.வேலைக்காரன் படம் தான் நான் ரஜினி ரசிகனாக ஆகுவதற்கு முதல் காரணமாக இருந்தது .......பிடித்த படம் என்றால் maximum எல்லாமே பிடித்த படம் தான் ........

கொடிபறக்குது இந்த படம் பாரதிராஜா எடுத்தது படம் ரொம்ப நாள் ஓட வில்லை என்றாலும் எனக்கு பிடிக்கும் .இந்த படத்தில் இருந்து தான்  மணிவண்ணன் நடிகராக ரீ என்ட்ரி கொடுத்த படம் .மணிவண்ணனுக்கு பாரதிராஜா குரல் கொடுத்து இருப்பார் நன்றாக இருக்கும் .குறிப்பாக இந்த தாதா காரெக்டர் ரொம்ப நல்லா இருக்கும் .

எஜமான் இந்த படம் நான் ரஜினியை முதலில் ஒரு படம் முழுவதும் வேஷ்டி சட்டையோடு பார்த்தது.பாட்டு அவ்வளவும் சூப்பர் டுப்பர் ஹிட் .இதுல தலைவர் தோளில் துண்டை ஒரு சுற்று சுற்றி போடும் அழகே தனி அழகு தான்.

தர்மயுத்தம் இந்த படத்தில் ரஜினிக்கு பௌர்ணமி அன்னைக்கு பைத்தியம் பிடிக்கும் .ரெண்டு பாட்டு சூப்பர் ஹிட்."ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு ","ஆகாய கங்கை " இதில் ஆகாய கங்கை பாட்டுக்கு முழுவதும் ஸ்ரீதேவி உட்கார்ந்தே இருபாங்க காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் உட்கார வைத்தே ஷூட்டிங் முடித்தாக கேள்வி பட்டு இருக்கிறேன்.

பாபா இந்த படம் தோல்வி படம்னு எல்லோரும் சொல்லுவாங்க .ஆனா  எனக்கு இந்த படம் புடிக்கும் .மேக் அப் தான் சுத்தமாக நல்ல இருக்காது இந்த படத்தில் பாட்டு  அனைத்தும் ஹிட் .பாபா கவுன்ட்ஸ் ஸ்டார்ட் ன்னு சொல்லுற அழகே தனி தான்.

தர்மதுரை இந்த படத்தில் முதல் பாதி முழுவதும் காமெடியாக இருக்கும் அடுத்த பாதி ரொம்ப கதை அம்சம் உள்ளதாக இருக்கும் .இரு தம்பிகளுக்காக சொத்து ,குழந்தை எல்லாம் இழந்து விடுவார்.அதுலேயும் தம்பிகளை பார்பதற்காக சென்னை வரும் பொழுது அவர் டிரஸ் எல்லாம் போட்டு செம காமெடி யாக இருக்கும்.இந்த படத்தில் ரெண்டு சூப்பர் டுப்பர் பாட்டு"அண்ணன் என்ன தம்பி என்ன ",மாசி மாசம் ஆளான பொண்ணு " இந்த ரெண்டு பாட்டு ரொம்ப புடிக்கும் எனக்கு.

ராஜா சின்ன ரோஜா இந்த படத்துல தான் தலைவருக்கு ஒரு பாட்டு "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட "இந்த பாட்டு செம ஹிட் அதுக்கப்புறம் கார்டூன்ஸ் கூட நடனம் ஆடும் ஒரு பாட்டு .தலைவருக்கு அதற்க்கப்புறம் ஏகப்பட்ட குழந்தைகள் ரசிகர்களாக மாறிவிட்டனர் .....

வேலைகாரன் நான் ரஜினி ரசிகனாக ஆனதற்கு முக்கிய கரணம் இந்த படம் .நல்ல கமெடி குறிப்பாக நாசர் உனக்கு இங்கிலீஷ் தெரியுமா என்று கேட்டவுடன் தலைவர் சொல்லும் ஸ்டைல் தனி.பாட்டு அனைத்தும் ஹிட்.

சிவாஜி இந்த படத்தை பற்றி சொல்லவே வேண்டாம். பாட்டு அனைத்தும் ஹிட் ,பஞ்ச் வசனம் ஹிட், ரஜினி ரொம்ப இளமையா காண்பிச்சு இருபங்க .இது என் பொண்ணு கூட ரொம்ப ரசிச்சு பார்த்த படம் அப்போ அவள் LKG படிச்சா அப்போ தலைவரோட மகிமைய பார்த்துகோங்க ?படம் செம ஹிட் .பெரியோர் முதல் சிறியவர் வரை எல்லோரையும் ரீச் ஆனா படம் .

பாட்ஷா எல்லோருக்கும் முதல் இடம் இந்த படம் தான் .ஏன் தலைவருக்கே  இந்த படம் தான்னு அவரே சொல்லி இருக்கார். இதில் முதல்  சண்டை கட்சி ரொம்ப நல்லா  இருக்கு. பாட்டு ஹிட் .அதற்க்கப்புறம் ரஜினிக்கு ரகுவரன் தான் வில்லன் ரோல்க்கு ரொம்ப சரியான ஆள் இவர்தான்.

அண்ணாமலை என்னோட டாப் 10 இது தான் முதல் இடம் இதை தான் அதிகமாக பார்த்த படமும் கூட. இந்த படத்தில் இருந்து ரஜினி அரசியல் பஞ்ச் வசனம் வச்சு பேச ஆரம்பித்தார் .என்னோட செல் ரிங் டோன் கூட "வெற்றி நிச்சயம் இது வேத தத்துவம் "இந்த சாங் தான் ரொம்ப நாள் இது தான் இருந்தது .மலைடா அண்ணாமலை அப்படி சொல்ல வசனம் .ரொம்ப புடிக்கும் .அதற்கப்புறம்
"ஆமபளைங்க போடுறது மன கணக்கு
பொண்ணுங்க போடறது திருமண கணக்கு " இந்த வசனம் மனப்பாடம் .ரொம்ப புடிச்ச படம் இதை ஆடிக்க எந்த படமும் இல்லை என்னோட வரிசையில்

இது மட்டும் தான் என்னோட பிடித்த படம் இல்லை .தில்லுமுல்லு ,தம்பிக்கு எந்த ஊரு ,முள்ளும் மலரும் ,நெற்றிகண் ,மாப்பிளை ,போன்ற படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சரி அடுத்த தொடர் பதிவை யாரை எழுத சொல்லனம்னு யோசிச்ச பொழுது இருவரை தேர்ந்து எடுத்திருக்கிறேன்.

பிரபாகர்  .பிரபாகரனின் தத்துபித்துவங்கள்மற்றும்
அருண் பிரசாத்: சுற்றுலா விரும்பி
 

Wednesday, November 10, 2010

பதில் சொல்லுங்கப்பா ?

என்ன நடக்கிறது தமிழ் நாட்டில் ஒண்ணுமே புரியவில்லை .நேத்து மங்குனி பதிவில் என்கௌண்டர் பற்றி எழுதி இருக்கிறார் அதில் தமிழ் மலர் என்ற பதிவர் நானும் ஒரு பத்திரிகையாளர் என்று கூறி இருக்கிறார் .சரி அப்போ உண்மை என்பது பத்திரிகையில் வரவே வராதா ?........




போன வாரம் என்னடான்னா ஒரே கீர்த்திவாசன் கடத்த பட்ட செய்தி .......சரி கீர்த்திவாசன் அப்பா பேரு ரமேஷ் அவரோட போட்டோவ  ஒரு நாதாரிகளும் போடலை.கேட்டா privacyன்னு சொல்லுவாங்க ......ஆனா இந்த போலீஸ் 50 ரூபாய் திருடுறவன ஜட்டியோட  போஸ் கொடுத்து பத்திரிகையில் போடுவாங்க.ஒரே நாள் இரவோடு இரவாக ஒரு கோடி புரட்டின புண்ணியவான் அ  கண் குளிர பார்க்கலாம்னு நினைச்சா அவர் முஞ்சிய கடைசி வரைக்கும்  பார்க்கவே முடியல? இது தான் பத்திரிகைகாரங்க.ஒரு வேளை அவர் கோடிஸ்வரர் அதனால் தன் முகத்தை வெளி உலகத்திற்கு காண்பிக்க மாட்டார் போல இருக்கு .இதற்கு உடந்தை இந்த பத்திரிகை  இதுதான் பத்திரிகை தர்மமா? 

சரி இது எல்லாம் இருக்கட்டும் நான் இப்பொழுது இன்னொரு கேள்வி கேட்கிறேன் இதை அரசியல் தெரிந்த நபர்கள் யாராவது வந்து பதில் கூறுங்கள் .தமிழ் நாட்டில் கடந்த ஒரு மாதத்தில்  சிமெண்ட் விலை 160 ரூபாயில் இருந்து 300 ரூபாய்க்கு ஏறிவிட்டது .ஏன் இந்த திடீர் ஏற்றம்?.அரசும் மௌனம் சாதிக்கிறதே தவிர இதற்கு விடை சொல்ல வில்லை .

மத்திய மாநில அரசுகள் புதிய வரி எதுவும் விதிக்கவும் இல்லை.மூல பொருட்களின் விலையும்  ஏற வில்லை .ஒருமூடை சிமெண்ட்ன் அடக்கவிலை 140 முதல் 160 ரூபாய் தான் பின்பு ஏன் இந்த விலை ஏற்றம் ?

பத்திரிகை துறை ஏன் மௌனம் சாதிக்கிறது ?அவர்களுக்கு தெரியுமே ?.ஏன் அவர்கள் இதை பற்றி விரிவாக எழுத வில்லை ?..

எதற்கெடுத்தாலும் பக்கத்து மாநிலத்தை சுட்டி காட்டும் நமது முதல்வர் இந்த விசயத்தில் மௌனமாக இருக்கிறார் .ஏனென்றால் பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து கிட்டத்தட்ட 60 முதல் 75 ரூபாய் அதிகமாக நம் மாநிலத்தில் இருக்கிறது..

ஏன் இந்த பகல் கொள்ளை ? கட்டுமான வேலை ஸ்தம்பித்து நிற்கிறது ........நிறைய தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள் .இதற்கும் பதில் இல்லை .......

ஒருவேளை விவசாய நிலங்கள் எல்லாம் வீடுகளாக மாறுகிறது அதனால் எல்லா பொருட்களின் விலையை ஏற்றி விட்டால் நடுத்தர மக்களால் வீடு கட்ட முடியாது ........விவசாய நிலமும் விலை போகாது என்ற எண்ணமோ? தெரியவில்லை?சிமெண்ட் மட்டும் இல்ல செங்கல் 3.50 ரூபாயில்  இருந்து 6 ரூபாய் ஆகி இருக்கிறது (ஒரு செங்கல்).கம்பி 33000திலிருது 40000ஆகிவிட்டது (ஒரு டன்னுக்கு ).

ஏன் இந்த விலை ஏற்றம் புரியவே இல்லை .?

யாராவது வந்து சொல்லுங்க ..நானும் சீக்கிரம் வீடு கட்டனும் (ரமேஷும் பாவம் இப்ப தான் நிலத்தை வாங்கினான் அதுக்குள்ள இவங்களுக்கு பொருக்க முடியலை.இனி எப்ப வீட்ட கட்டி ?எப்ப கல்யாணத்தை பண்ண போறனோ ? )............

பன்னி வாங்க நீங்க தான் சரியா விளக்கம்(வில்லங்கம் வரகூடாது மக்கா) கொடுப்பீர்கள் ......