Friday, August 17, 2012

லவ் பண்ணுங்க சார்ர்ர்ர்!


லவ் பண்ணுங்க சார்ர்ர்ர்! 

காலைல எட்டு மணி வரை தூங்கிட்டு சரியா பல்லு கூட தேய்க்காம .குளிக்காம நிறைய செண்டா பீச்சு அடிச்சுகிட்டு நேர ஆபிஸ்ல போய்  உக்கார்ந்தா .நேத்து போட்ட வியர்வை நாற்ற சட்டைல  இருந்து சென்ட்டும் சேர்ந்து கப்பு  அடிக்கும் பாருங்க ...பக்கத்துல இருக்குற அட்டு பிகர் கூட உங்கள பார்த்து முறைச்சி கிட்டு தலையில் அடிக்குமே அந்த கொடுமைய பார்க்காம இருக்கணும்ன்ன லவ் பண்ணுங்க சார்!


இதே நீங்க லவ் பண்ணினீங்க வைச்சுக்குவமே, அதி காலைல 5 மணிக்கு குட்மார்னிங் டா செல்லம் காலைல 8 மணிக்கு ஷக்கிலா தெருல மீட் பண்ணுவோம்ன்னு ஒரு எஸ் எம் எஸ் தான் வரும் ! இவன் ஒரு நாளும் பல்லு தேய்க்காம இருக்கிறவன் அன்னைக்கு பினாயில் ஊத்தி வாயக் கழுவி, ஆசிட்ல குளிச்சு சென்ட் பீய்ச்சி அடிச்சுகிட்டுப் போய்  ஈ-ன்னு பல்லக் காண்பிச்சுக்கிட்டு 7.30 கே அங்க போய் அவளப் பிக்கப் பண்ணி, அவ போக வேண்டிய எடத்துல விட்டுகிட்டு, அபீஸ் போய் உக்கார்ந்தா அதே அட்டு பிகர் இவன பார்த்து ஒரு ரொமாண்டிக் லுக் விடுமே பாருங்க ..போங்க சார் அது எல்லாம் அனுபவிக்கனும் சார் ..அதான் சொல்லுறேன் லவ் பண்ணுங்க சார்!
படிச்சு முடிச்சு வெளிநாட்டுக்கு வேலைக்கு போகும்போது உங்க அட்டு பிகர் எண்ணெய் தலைல அடிச்சு சத்தியம் பண்ணிட்டு போவீங்க! போற இடத்துல எந்தப் பொண்ணையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்னு! அங்க போனதுக்கப்பறம்தான் உங்க மேலதிகாரியே உங்களுக்கு ப்ரபோஸ் பண்ணும்போதுதான் உறைக்கும்! அய்யய்யோ..தப்பு பண்ணிட்டோமோன்னு! அப்பிடி நீங்க நினைக்க மாட்டீங்களா? அப்ப நீங்க லவ் பண்ணுங்க சார்!


இல்ல நான் லவ் பண்ணமாட்டேன் அப்பா சொல்லுறதக் கேட்டு உருபடுவேன்னு சொன்னா என்னமோ பண்ணுங்க சார், ஆமா உறுப்படியா எதோ ஒரு டிகிரி முடிச்சு வீட்ட காப்பாற்ற வேலைக்கு போவ ..சம்பாதிச்சு அனுப்பினா அவங்களும் உன் பேர்ல போட்டு சேர்த்து வைப்பாங்க ..நீ ஒரு பீடி துண்டு கூட குடிக்காம் ..ஏன் எச்சி பீடி கூட குடிக்காம ,க்வாட்டர் அடிக்காம பணத்த அனுப்பி ஒன்னும் அனுபவிக்காம பணத்த அனுப்பி ..ஹையோ அந்த கொடுமையயும் அனுபவிக்கனும்ன்ன லவ் பண்ணாதீங்க சார்!


இதே நீங்க லவ் பண்ணினா டேய் இன்னைக்கு அந்த பொருக்கி கூட சேர்ந்து பஸ்ஸ்டாண்ட்ல ஒரே பீடியை ரெண்டு பெரும் குடிச்சீங்கலேன்னு என் ஜைன்தவி கேக்கும் போதே அது ஒன்னும் இல்லடி செல்லம்ன்னு பேச்ச மாத்தும் போதே ..டேய் இந்த 50 ரூபாய் பஞ்சு வச்ச சிகரட் குடிடா ன்னு சொல்லும் ..அதுக்கு தான் சொல்லுறேன் லவ் பண்ணுங்க சார்!


இல்ல எங்க அப்பா பார்த்த பொண்ண தான் கட்டிக்குவேன்னு சொன்னா அதுவும் ஒரு டிகிரி முடிச்சிருக்கும் .இப்ப இருக்கிற காலத்துல ரெண்டு பேர் வேலைக்கு போகணும் அதுக்கு ஒரு மாஸ்ட்டர் டிகிரி முடிக்கணும்ன்னு நீ உங்கப்பா கிட்டா சொன்னா ..அவரு அதை கேக்காம உனக்கு ஒரு டிகிரி முடிச்சத கட்டிவைப்பாறு கல்யாணம் முடிஞ்சு நீ அத படிக்க வைக்கணும்! காலைல அடுப்படில ரெண்டு பேருமா பாத்திரத்தப் போட்டு உடைச்சி சமையல் செய்து அரக்க பறக்க ஓடி அவளக் கொண்டு போய் காலேஜ்ல விட்டா! பக்கத்த்துல ஒரு குட்டு பிகரு அண்ணா ன்னு உன்ன கூப்பிட்டு கடுப்ப ஏத்தும் இது தேவையா!


சரி குழந்தை இருந்தா அது கூட விளையாடலாம்னா  காலேஜ் முடிக்கிற வரைக்கும் நோ குழந்தை ன்னு தடா ...அட பாவமே சரி காலேஜ் முடிஞ்சிது இனி குழந்தை பெத்துக்கலாம் ன்னு சொன்னா வேலை கிடைக்கட்டும் அதுக்கு தானே படிச்சேன் ன்னு சொல்லி வேலை தேடுவா ..அப்புறம் வேலை கிடைச்சா இன்னும் ஒரு வருஷம் ஆகிட்டா எனக்கு இன்க்ரீமென்ட் வந்திடும் வேலை பர்மனன்ட் ஆகிடும்ன்னு சொல்லுவா ..அப்போ எனக்கு 40 வயசு ...ஹையா இனி குழந்தை பெத்துக்கலாம்ன்னு சொன்னா ..ஏங்க கண்ணாடில உங்க மூஞ்சிய பார்க்கிறது இல்லையான்னு கேப்பா பாரு ஒரு கேள்வி ..நானும் போய்க் கண்ணாடிய பார்த்தா ..ஒரு முடிகூட தலைல இல்லை ..மீசை கூட வெள்ளை ஆகிடுச்சு ..என்ன கொடுமை பார்த்தீங்களா சார்!


இதே லவ் பண்ணின்னா ..நாங்க மீட் பன்னுவதர்க்காகவே  ஒரு மாஸ்ட்டர் டிகிரி படிக்க போவோம் .. காதல் முத்தி முதல குழந்தைக்கு ஏற்பாடு பண்ணிட்டு கல்யாணம் பற்றி வீட்டுல சொல்லுவோம் ..உங்களுக்கும் ஒரு ஜைன்தவி கிடைக்கட்டும் ..லவ் பண்ணுங்க சார்!


டிஸ்க்கி : இது யாருக்கும் எதிர் பதிவு இல்லை முக்கியமா நண்பன் டெரர் பாண்டியனுக்கு எதிர் பதிவு இல்லை

Saturday, July 14, 2012

ஆசைக்கு ஒரு பொண்ணு ஆஸ்த்திக்கு ஒரு பையன்


ஆசைக்கு ஒரு பொண்ணு  ஆஸ்த்திக்கு ஒரு பையன் எல்லோரும் நினைப்பது இது தான் .இது என் வாழகையிலும் நடந்தேறிவிட்டது .ஆம் இன்றோடு என் பையன் பிறந்து ஒரு மாதம் ஆகிறது .ஜூன் 14 காலை  10 .59 க்கு மகன் பிறந்தான் சந்தோசமான நாள்களில் இதுவும் ஒன்று .

முதலில் நன்றியை இருவருக்கு தெரிவித்து கொள்கிறேன் .உணவு உலகம் சார் மற்றும் பன்னிகுட்டி இருவருக்கும் .இரு குழந்தைகளுக்கு இடையே இடைவெளி தேவை என்று அரசு அறிவித்தாலும் நான் ரொம்ப நாள் கழித்து தான் மற்றொரு குழந்தை பெற்று கொண்டேன் .ஆம் 7 வருடங்கள் கழித்து முதலில் பெண்குழந்தை அதுவே ஒரு பயம் மறுபடியும் பெண் குழந்தை என்றால் நம்மோட பொருளாதாரத்தில் நல்ல விதமாக குழந்தை வளர்க்க முடியுமா என்ற பயம் .ஒவ்வொரு முறை உணவு உலகம் சாரை சந்திக்கும் பொழுது என் மனதை கரைத்த புண்ணியவான் அவரு .அதில் உள்ள நிறைகளை  பக்குவமாக என் மரமண்டைக்கு புரியும் படி எடுத்து கூறிய விதம் அப்படி .அதே மாதிரி பன்னிகுட்டி ஊருக்கு வரும் பொழுது இன்னொன்னு பெத்துக்கோ மக்கா நாளைக்கு அதுகளுக்கு கஷ்ட்டம் ன்னு வந்தா சொந்த பந்தம் இல்லாம நிக்கும்ன்னு சொல்லி இன்னொண்ண பெத்துக்க வச்சிட்டாங்க இந்த இருவரும் .
அதுவும் ரெண்டாவது பையன் என்ற பொழுது என் சந்தோசத்துக்கு அளவே இல்லை .நண்பர்களுக்கு எல்லார்கிட்டேயும் போன்ல தகவல் சொல்லிட்டேன் (நினைக்கிறேன் ).ஆனா உணவு உலகம் சார் கிட்ட மட்டும் இந்த நிமிடம் வர சொல்லலை .ஒவ்வொரு நாள் இன்னைக்கு சொல்லிடனும்ன்னு நினைச்சு போன் எடுத்தாலும் .அவர்  பொண்ணு  கல்யாணத்துக்கு நான் போக முடியாததை நினைத்து போன் பண்ணாம இருந்துவிடுவேன் .மனதுக்கு கஷ்ட்டமாக  இருக்குது  அதான் ஒரு முடிவோட இருக்கேன் .இனி பையனோட நேர்ல போய் ஆசிர்வாதம் வாங்குறதுன்னு முடிவு எடுத்துட்டேன் .அதுக்கு நாளும் நெருங்கிவிட்டது ,கூடிய விரைவில் அவர் வீட்டுக்கு குடும்பத்துடன் போய் காலில் விழுவது என்று முடிவு செய்தாகிவிட்டது .அனேகாமாக ஜூலை கடைசி வாரத்தில் காலில் விழும் வைபோகம் நடக்கும் .
இது எல்லாம் போக கடந்த மூன்று மாதங்களாக மன அழுத்தம் இருந்த சமையத்தில் போரம் ,கூகிள் ப்ளஸ் வராம அமைதியா இருந்த நேரத்துல  கும்மி நண்பர்கள் பதறி போய் போன் பண்ணி கேக்குறது .என் மன அழுத்ததை  வெகுவாக குறைத்தது என்றே சொல்லுவேன் (ஒவ்வொருவரையும் தனியா பேர் சொல்லலை சண்டைக்கு வர கூடாது ....).
சரி இவ்வளோ சந்தோசத்துக்கு காரணம் உணவு உலகம் சார் ,பன்னிகுட்டி மற்றும் கும்மி நண்பர்கள்ன்னு சொல்லுறீயே அவங்களுக்கு என்ன செய்தன்னு இந்த சிரிப்புபோலிஸ்  கேக்குறான் ..அதுக்காக பன்னிகுட்டி ,கும்மின்னு எல்லாம் என் பையனுக்கு பேர் விடமுடியாதுங்க ..ஜூலை 25 பையனுக்கு பேர் சூட்டும் விழா எங்கள் வீட்டில் தேரூர் ,கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து நடைபெறுகிறது அனைவரும் வர வேண்டும் என்று கட்டளை இடுகிறேன் ..
என்னாது ..என்ன பேரா ?அதான் சொல்லிட்டேன்ல பன்னிகுட்டி ,டெரர் கும்மின்னு பேர் வைக்க முடியாதுன்னு சொன்னேன்ல ...யோவ் பேர சொல்லுயான்னு டெரர் கேக்குறான் பாருங்க ..சரி இதாங்க பேரு
 ராம் பிரணவ் சங்கர் .
உணவு உலகம் சார் பேரு இதுல வருது .நான் அவர் பேர் வைக்கணும்ன்னு நினைச்சு வைக்கலை .ஆண் பிள்ளையாக இருந்தால்  சங்கரன்கோவில உள்ள சங்கர நாராயணர் பேரு விடுறேன்னு நினைத்து இருந்தேன் அதான் இந்த பேரு .
ஆனா கடவுளும் நீ இன்னொரு பிள்ளை வேணும்ன்னு முடிவு எடுக்க காரணமாக இருந்த அவர் பேரு வைக்கணும்ன்னு என்று தான் என் மனதில் இப்படி ஒரு எண்ணத்தை விதைத்தாரோ என்னவோ .? . 
அதில் எனக்கு முழு சந்தோசமே ...

Monday, December 26, 2011

டெரர் கும்மி விருதுகள் ..


அனைவருக்கும் வணக்கம்,

கொஞ்சம் இருங்க.. இது என் ப்ளாக்தானான்னு செக் பண்ணிட்டு வர்றேன்... ம்ம்... என்னோட ப்ளாக்தான், நல்லவேள ஆட்சி மாறிடுச்சு.. இல்லைனா இதையும் பட்டா போட்ருப்பாங்க. சரி.. அரசியல் பேச இங்க வரலை... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கேன். எங்களோட டெரர் கும்மிய பத்தி நான் உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. அதன் மணமும் அங்க உள்ளவங்களோட மனசும் உங்களுக்கு நல்லாவே தெரியும்.  கதை ,HUNT FOR HINT போட்டின்னு கலந்து கட்டி அடிச்சது  நாங்க தான் .

அதுக்கெல்லாம் ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறேன்.இப்ப நாங்க விருதுகளோட வர்றோம். கண்டிப்பா அனைவரும் கலந்துக்கங்க. அந்த வெற்றியாளர் நீங்களாக கூட இருக்கலாம். மேலும் விபரங்களுக்கு தொடந்து படிங்க.
அனைவருக்கும் வணக்கம்,
ஒரு இனிமையான பொழுதில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முதல் முறையாக இதைப் படிப்பவர்கள் சிரமம் பாராமல் டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு மற்றும் டெரர் கும்மி விருதுகள் போட்டி விதிமுறைகள் ஆகிய இரண்டு பதிவுகளையும்  படித்துவிட்டு இதை தொடருங்கள். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று டிசம்பர்  26-ம் தேதி உங்கள் பதிவுகளை இணைப்பதற்கான அறிவிப்போடு வந்துள்ளோம்.



முதலில் நாங்கள் கொடுக்கும் இணைப்பை தொடுத்து எங்கள் போட்டிக்கான தளத்தை திறந்துகொள்ளுங்கள். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பதிவு ( ரெஜிஸ்டர் )ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் விரைவில் உங்களுக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும் என்ற தகவல் ( மெசேஜ் ) வரும். உங்கள் மின்னச்சல் முகவரிக்கு அந்த லிங்க் வரும்வரை தயவுசெய்து காத்திருங்கள். எதற்கும் உங்களுடைய ஸ்பேம் அல்லது ஜங்க் மெயிலையும் சோதனை செய்துகொள்ளு்கள். மின்னஞ்சலில் ஆக்டிவேசன் லிங்க் கிடைக்கப்பட்டு அதை அழுத்தினால் நீங்கள் இப்போது பதிவுகளை இணைப்பதற்கு தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
பதிவுகளை இணைப்பதற்கு இரண்டு பிரிவுகளாக வைத்துள்ளோம். பொதுப்பிரிவில் நீங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட மூன்று பதிவுகளை மட்டுமே இணைக்கமுடியும். அடுத்து புதுமுக பதிவர்களுக்கான பிரிவு. இதில் அவர்களின் சிறந்த பதிவாகக் கருதும் மூன்று பதிவுகளை இணைக்கலாம். மேலும் புதுமுக பதிவர்கள் மட்டும் பொதுப்பிரிவில் இணைத்த பதிவுகளையும் புதுமுக பிரிவில் இணைக்கலாம். பதிவுகளைஇணைக்க கடைசி தேதி 2012 ஜனவரி 6 என்று விதிமுறைகளில் அறிவித்தோம். பல வாசகர்கள் தொடர்புகொண்டு விடுமுறை நாட்கள் அதிகம் வருவதால் கால அவகாசத்தை நீட்டிக்க சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2012 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்க்கு பிறகு இணைக்கப்படும் பதிவுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுடைய விதிமுறைகள் பற்றிய பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இதையும் மீறி ஏதேனும் சந்தேகம் அல்லது பதிவு செய்வதில் ( ரெஜிஸ்டர் ) பதிவுகளை இணைப்பதில் பிரச்னை அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் கருத்துரைகளில் கேளுங்கள் அல்லது  contest_2011@terrorkummi.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.உங்களுக்கு  உதவுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது சுலபமான  ஒன்றுதான். கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  இணைப்பை பயன்படுத்தி எந்த பிரிவில் உங்கள் பதிவுகளை இணைக்கப்போகிறீர்கள் என்று தேர்வு செய்து உங்கள்  பதிவுகளைஇணைக்கவும். இணைப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை சரியான பிரிவில் சரியான பதிவை இணைக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் ஒருமுறை  இணைத்த பதிவை மறுமுறை மாற்ற இயலாது. மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு தொடர்ந்து உங்களோடு இணைந்திருக்கிறோம். நன்றி.
                                                                                      



Monday, July 11, 2011

ஊடகங்கள் மீது கோபம ஏன் ?





                                                                




தயாநிதி மாறன பதவி விலகியது பற்றி செய்தியாளர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கேள்வி கேட்ட பொழுது “இன்றைய உலகில், குறிப்பாக இந்தியாவில் ஊடகங்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்த முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல”என்று கூறியது நகைச்சுவையாக உள்ளதுதனது பேரன் தயாநிதி மாறன பதவி விலகியதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று கருணாநிதி நேரடியாக குற்றம் சாட்டுகிறார். கலைஞர் இப்படி குற்றம் சாட்டுவது முதல் முறை அல்ல .இதற்க்கு முன்பும் நிறைய தடவை இந்த மாதிரி குற்றம்சாட்டி உள்ளார்.

தயாநிதி பற்றி ஊடகங்களில் வரும் செய்திகள் கடந்த ஆறு வாராமாக தான் வருகிறது .ஆனால் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்க தன் அதிகாரத்தை பயன்படுதியது 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தோடு தொடர்புடையதாகும். அப்பொழுதெல்லாம் இவரது குடும்ப ஊடகங்களை வைத்து என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று இவருக்குத் தெரியாதா? எத்தனையோ பிரச்சனைகளை உங்கள் டீவிகளில் போட்டு ஊதி ஊதி குளிர்காய்ந்தீர்களே, உங்கள் பேரன்கள் எடுக்கும் குப்பை படங்களைக்கூட டீவியில் விளம்பரம் செய்து செய்து ஓட்டி காசு பாத்தீர்களே, அப்போது வராத இந்த கோபம இப்ப மட்டும் ஏன் ஊடகங்கள் மீது வந்தது? குடும்பப்பாசம் கண்ணை மறைக்குதோ? தன் குடும்பத்திற்குள், சொத்தையும் கட்சியையும் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைகளை தமிழ்நாட்டில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒளிபரப்பியது நாறடித்தது சன் டிவி தான் என்பது கலைஞருக்கு வேண்டுமென்றால் மறந்திருக்கலாம், மக்களும் மறந்துவிடுவோமா என்ன?

ஆனால் இப்போதும் உண்மை எதுவென்றால் தயாநிதி மாறன் பிரச்சனையோ, ஸ்பெக்ட்ரம் பிரச்சனையோ, ஊடகங்களால் உருவாக்கப்படவில்லை. இது சாதாரண மக்களுக்கும் புரியும் .2G அலை கற்றையின் ஊழல நாயகன் ராசா என்று தன்னை ஊடகங்கள் வர்ணிப்பதை பொருக்க முடியாத தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசா ஒரு உண்மையை கூறினார். “எந்த வழிமுறைகளை பின்பற்றி எனக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை செய்தார்களோ அதே வழியைத்தான் நானும் கடைபிடித்தேன” என்று கூறினார். அதுதான் தயாநிதி மாறனுக்கு வினையானது.

உண்மையில் கலைஞரின் ஆதங்கம் வேறு! அவர் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்துங்கள். “ஊடகங்கள் நினைத்தால” என்று அவர் கூறுவதற்குக் காரணம், தனது கட்சியினரின் ஊழலை மட்டுமே இந்த ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன” என்பதே அவருடைய ஆதங்கம். “நாட்டில் பல ஊழல்கள் நடந்து இருக்கிறது அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறீர்கள், எங்களை மட்டும் பெரிதாக ஊடகங்கள் சித்தரிகின்றன என்பதுதான் அவர் கோபம் என்று அவருடைய வார்த்தைகளில் தெரிகிறது. ஆனால், உங்களுக்கு நெருங்கியவர்கள் வேண்டுமென்றே கசியவிடும் ஆதாரத்தைக் கொண்டு நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிப்பது குற்றமா? இதே வேலையை உங்கள் குடும்ப தொலைக்காட்சிகள் முன்பு செய்யவில்லையா? ஆதாரங்களைக் கசியவிட்டவர்களிடம் அல்லவா நீங்கள் கோபப்பட வேண்டும்? அதைவிட்டுவிட்டு அதைச்சொன்ன ஊடகங்கள் மீது கோபப்படுவது நியாயமா? உங்களுடைய குடும்பத்தினர்தானே தமிழ்நாட்டில் ஊடக சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்கள்? நானும் ஒரு பத்திரிகையாளன் தான் என்று அடிகடி மார்தட்டி கொள்ளும் நீங்கள் இப்படி கூறலாமா..? 

இதற்கு ஊடகங்கள் என்ன செய்ய முடியும் ..? அவர்கள் தொழில் அது. நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் மைய அரசு தரும் தகவல்களைத்தான் அவர்கள் வெளியிடுகிறார்கள். ஆதாரத்தை அள்ளித்தரும் அந்த நபர்களை நீங்கள் கண்டு கொள்ளாதது ஏன்? நீரா ராடியா உரையாடல்களை பதிவை செய்தது யார்? அது எந்தத் துறை?அந்த ஒலிநாடாக்களை வெளியிட்டது யார்?அது எந்தத் துறை? இதை உங்கள் ஊடகங்களால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லையா? உங்களுக்குத் தெரியாமலா இவ்வளவும் நடந்தது? முடிந்தால் இருந்தால் அதக் கண்டுபிடித்து உங்கள் குடும்ப டீவியில் ஒளிபரப்புங்களேன், தெரிந்து கொள்ள எங்களுக்கு ஆசையாக இருக்கிறது. 

Monday, May 30, 2011

பதிவர்களே நெல்லைக்கு வாங்க .....


                                                       

ஞாயிறு (29-05-11)மாலை ஐந்து மணிக்கு என் குடும்பத்தோட நண்பர் ...இல்ல .இல்ல... அன்பர் சங்கரலிங்கம் அவர்களை பார்க்க சென்றேன் .ரொம்ப எளிமையான மனிதர் .இவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்த கௌசல்யா சகோதரி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .நிறைய விழிப்புணர்வு கட்டுரைகள் இணைய உலகத்தில் கொட்டி கிடக்கிறது. சில சமயம் நானும் சொல்லி இருக்கிறேன் ,செயல் படுத்துவது ரொம்ப கடினம் .ஆனால் சங்கரலிங்கம் சார் அவர்கள் வாய் சொல்லில் மட்டும் வீரராக இல்லாமல் செயலிலும் காட்டி அசத்தி கொண்டு வருகிறார் என்பதை என் நண்பர்களுக்கு பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .


முதலில் நான் என் குடும்பத்தோடு நெல்லை போய் சேர்ந்தேன் .பிரபல பதிவர்கள் என்றால் கொஞ்சம் லேட் ஆக தான் வருவாங்க. அதே மாதிரி கௌசல்யா சகோதரி தன் கணவருடன் லேட் ஆக வந்து சேர்ந்தார் .மற்றொரு பதிவர் ராம்குமார் 2006 முதல் எழுதுகிறார் www.nellainanban.blogspot.com நெல்லை நண்பன் என்ற வலைபூவில் எழுதுகிறார் .அவர் என்னை ,கௌசல்யாவை விட சீனியர் அதனால் அதன் பிறகு தான் வந்தார் (சீனியர் என்றால் அப்படி தான் இருக்கணும் போல ...ஹி ..ஹி ..).
ஆனா ரொம்ப சின்ன பையன் 25வயது தான் .இவர்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி .
அப்படியே நெல்லையில் பதிவர் சந்திப்பு பற்றி பேச்சு திரும்பியது .நானும் என் பங்குக்கு நம்ம PSV சார் ,கோமாளி செல்வா இவர்களை கூப்பிட்டேன் .இருவரும் வருவதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளார்கள்.அப்புறம் சங்கரலிங்கம் சார் வாங்க மிதிலா ஹால் போய் பார்த்துட்டு வருவோம்ன்னு கூப்பிட்டார்கள் ..போய் பார்த்துவிட்டு ஜூன் 17 அன்று confirm பண்ணிவிட்டு வந்தோம் ...


திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. 'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் அவர்கள் தலைமையில் வரும்  17.06.2011 வெள்ளி அன்றுபதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.       

                        இடம்: மிதிலா ஹால்,A/C.
                        ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
                        நாள்: 17.06.2011 
                        நேரம்: காலை 10.00 மணி

10.06.2011 குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து விடலாம். 

அவரது  unavuulagam@gmail.com  mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.(தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..ஹையோ ..என்னோட ஸ்டைல்ல இருகரம்கூப்பி கேட்டு கொள்கிறேன் )
அவரது செல் எண் 9442201331.

என்னது ..டேய் சத்தம் போடாதீன்கப்பா... டெர்ரர் அண்ட் ரமேஷ் எதோ கேக்குறாங்க ...அல்வாவா..? கண்டிப்பா உண்டு மக்கா ...ஹி ஹி .....நேத்தே எனக்கு கிடைச்சிட்டு (அதுக்கு தானே போன அப்படின்னு எவனோ அங்க சொல்லுறான் பாரு ..)..

எலேய் ரமேஷ் சாப்பாடு ஓசூ தாண்டா(அப்ப தான் பய புள்ள முதல் ஆளாக வந்து நிப்பான் ..) .......உன்னால விடுப்பு எடுக்க முடிந்தால் வா ..

நம்ம சித்ரா அக்கா வாராக ..
நாஞ்சில் மனோ வாராக ..
கோமாளி செல்வா வாராக ..
சி .பி செந்தில் குமார் வாராக ..
சீனா ஐயா வாராக ..
வேடந்தாங்கல் கருண் வாராக ..மற்றும் நம் பதிவுலக நண்பர்கள் எல்லாம் வாராக ...வாம்மா மின்னல் ..சீ தூ ..ஒரு ப்ளோல அப்படியே வந்துட்டு ...நீங்களும் வரலாம் மக்காஸ் ..

ஏலே ஜெயந்த் நீ எப்போ ஊருக்கு வர ..அத சொல்லு ...

பதிவுலக நண்பர்கள் அனைவரையும் நேராக காண்பதில் ஆவலாக உள்ளேன் .எல்லோரும் கலந்து கொள்ளும் படி இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன் ...

என்னாது ..பார்ட்டியா ..?சோறு மட்டும் தான். அங்க வந்து தல சுத்துற மாதிரி இருக்கு ..கீழ போய் .பழரசம்(புரிஞ்சுக்கோன்கப்பா..!!) குடிக்க போனேன்னு யாராவது சொன்னா ..நான் திருநெல்வேலிகாரன் ..அருவாக்கு வேலை கொடுத்துராதீக ..இது ஒரு குடும்ப விழா ..அனைவரும் வருக ! விழாவை சிறப்பித்து தருக !!




Friday, May 6, 2011

மலரும் நினைவுகள் ..!!!

                                                                         

    

நான்காம் வகுப்பு முடித்து ஐந்தாம் வகுப்பு செல்லும் தன்  மகனை கூட்டிக்கொண்டு பள்ளி நோக்கி செல்கிறாள் தாய். ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் பையன் படிப்பு முக்கியம் என்று மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்தனர். அந்த குக்கிராமத்தில் ஆங்கில வழி கல்விக்கு போகும் முதல் சிறுவன் அவன் தான்.  சென்னையில் பணி புரியும் தனது கணவன் அனுப்பிய பணத்தினை  எடுத்துக்கொண்டு அந்த வருடத்திற்கான ஸ்கூல் பீஸ் கட்ட  எழுத்தாள் சொல்லிட முடியாத அளவு சந்தோசத்துடன் தன் கையை இறுகப்பற்றி பற்றிக்கொண்டு  வரும் மகனின் முகத்தை பார்த்து மனதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன்  சந்தோசத்துடன் கூட்டி கொண்டு செல்லும் அந்த தாயிடம்   

"புக் எல்லாம் வாங்கிருலாம் இல்லையா அம்மா ....!!  

"வாங்கிருவோம் செல்லம்" ..

"அம்மா அப்படியே கடைக்கு போய் பிரவுன் சீட் ..ஸ்டிக்கர் லேபிள் எல்லாம் வாங்குவோம் அம்மா" ..

இல்லடா அப்பா பீசுக்குக்கு மட்டும் தான் பணம் அனுப்பி இருக்காங்க.. இன்னும் 20 நாள் கழிச்சு அப்பா வந்து வாங்கி தருவாங்க  சரியா ..

பையன் வெடுக்கென்று அம்மாவின் கையை தட்டி விட்டு..... போன வாட்டியும் இப்படி தான் சொன்னீங்க கடைசில அப்பா ஸ்கூல் திறந்து ரெண்டு நாள் கழித்து தான் வந்தாங்க,  அப்புறம் தான் எனக்கு அட்டை எல்லாம் போட்டு தந்தாங்க .என் பிரெண்ட்ஸ் எல்லோரும் முதல் நாளே புதுபேக் ,வாட்டர் பாட்டில் எல்லாம் கொண்டு வந்தாங்க ..என்று கோவமாக கத்தினான் .

"சரிடா அப்பா சீக்கிரம் இந்த வாட்டி வந்திருவாங்க,  நீ ஏன் நடு ரோட்டில் இருந்து இப்படி கத்துற" என்று அம்மா கொஞ்சம் கடுஞ்சொற்களை வீசினாள் ..

அவனது மலர்ந்த முகம் வாடிப்போனது. அதன் பிறகு அவன் ஒன்றும் சொல்லவில்லை .. பேருந்து பிடித்து ஊர் வந்து சேர்ந்தார்கள் ..

அதே சிறுவனின் கால் நூற்றாண்டு வாழ்க்கைக்கு பிறகு 

 தன் மகளுக்கு பாட புத்தகம் வாங்கி வீட்டில் வைத்தான் ..

"அப்பா பைக் ஸ்டார்ட் பண்ணுங்க போய் பிரவுன் சீட் ,வாட்டர் பாட்டில் ,பேக்  ..எல்லாம் வாங்கி வருவோம்"  என்றாள் மகள் 

"குட்டிமா  இன்னைக்கு மே 7  தான் ஆகி இருக்கு இன்னும் நாள் இருக்கு பிறகு வாங்கலாம்" என்று கூறியதும் தான் தாமதம்  இன்றைக்கே வாங்க வேண்டும் என்று அழுது புரண்டு அடம பிடிக்க ஆரம்பித்தாள்.. 

அச்சமயம் அங்கே வந்த தாயின் நினைவில் பழைய நாட்கள் வந்து செல்ல அவனை பார்த்து "அப்பனுக்கு மகள் தப்பாம பிறந்து இருக்கிறாள் " என்று  சிரித்து விட்டு சொன்னாள்..

ஆம் ..அது ஒரு சந்தோசம் தான் புது புக் ,நோட்ஸ் எல்லாம் வாங்கி அட்டை போட்டு ..லேபிள் ஒட்டி,பேர் எழுதி வைக்கிறது ..கூடவே சோப்பு கவர் எடுத்து புக்குள்ள வைச்சு புக் திறக்கும் பொழுது வரும் வாசனை ..மயில் இறகு வைத்து அரிசி கொஞ்சம் வைக்கிறது ..ஏன் என்றால் மயில் இறகு குட்டி போடுமாம் ..(புக் அப்புறம் திறத்து பார்ப்பதே கிடையாது ..அது வேற விஷயம் ..)

பத்தாம் வகுப்புக்கு அப்புறம் மார்க் சீட் வீட்டில் காண்பிப்பதே கிடையாது .அம்மாவின் கையெழுத்தை எம்.சுப்புலெட்சுமின்னு அழகாக போடுவான் அந்த பையன் ....

இப்படி தன் கடந்த காலத்தை நினைத்தவன் .தன் மகளை பைக்கில் ஏற்றி கொண்டு கடை நோக்கி சென்று எல்லாம் வாங்கி வந்தான் ..

இன்று இரவு கச்சேரி இருக்குது ..அட்டை போடணும் லேபிள் ஓட்டனும் பேர் எழுதணும் ..ஹையோ ..ஹையோ ..

இந்த அப்பாவும் ,பொண்ணும்  யாருன்னு கேக்குறீங்க ...சாட்ச்சாத் பாபுவும் ..அவள் மகளும் தாங்க ..சின்ன பிளாஷ் பாக் ..நினைத்து பார்த்தல் சந்தோசம் மனதில் பரவி கிடக்கிறது ..


Thursday, March 17, 2011

அடை மொழி பேர்....!



                                  
                                                                     
                               (இவர்கள் வரிசையில் "இம்சை அரசன் பாபு "...)


தற்பொழுது நாட்டுக்கு ரொம்ப அவசியமான பதிவு ஒன்னு எழுதனம்ன்னு பதிவுலக நண்பர்கள் ..எல்லோரும் கெஞ்சி கேட்டு கொள்வதால் இந்த பதிவை எழுதுகிறேன் ..அதிலும் நம்ம சௌந்தர் என் காலில் விழுந்து கெஞ்சி கேட்டதால் வேறு வழி இல்லாமல் இதை எழுதுகிறேன் ,,ஹி ..ஹி ..புரட்சி தலைவி அம்மா மாதிரி என் மனது யாரவது காலில் விழுந்தால் உடனே அவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்யும் மனது உள்ளவன் ...
டேய் எதுக்கு இவ்வளவு பிலாகானம் கொடுக்குற ..முதல் ல நீ என்ன பதிவு எழுத போற அத சொல்லு  என்கிறீர்களா  ..அதாங்க எதோ பெயர் காரணம் சொல்லுனுமாம்லா ..அத பத்தி தான் ..

இப்ப இருக்குற ஹிந்தி நடிகர்கள் ஷாருக்கான் ..சல்மான் கான் ..அமிர்கான் ...பாராஹ் கான் ..அது மாதிரி தான் எனக்கு பேர் வைகனும்ன்னு நினைசிருப்பாங்க போல என் பெற்றோர்கள் ...நான் பிறக்கும் பொழுது இவர்கள் பிரபலம் ஆகவில்லை ..அதனால் ..

நேதாஜி ...நேருஜி ..மாதிரி பாபுஜி ...அது என்ன ஜி (சீ .அயோக்ய பயலே யார் கூட கம்பேர் பண்ணுற உன்னை )இல்லை மக்கா இப்படி நாட்டுக்காக உழைத்த நல்லவர்கள் போல ..என் மகனும் உழைக்கணும்ன்னு பாபுன்னு பேர் வெச்சாங்கன்னு ....நான் சொல்லுவேன் .!.ஆனா அதை நீங்க நம்ப மாட்டீங்க ...எதோ என் ஆச்சி (பாட்டி )பேர் பாப்பாத்தி அதனால தான் உன் பேரு பாபுன்னு விட்டுருக்காங்கன்னு யாரோ உங்க கிட்ட தவறான தகவல் தந்ததை தான் நீங்க நம்புவீங்க ...சரி விடுங்க .பாபு என்ற பேர் அப்படியே இருக்கட்டும்ன்னு விட வேண்டியது தானே என் அப்பா ...

அப்பவே எங்க அப்பா "பெண்கள் நாட்டின் கண்கள்"என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் ....பள்ளியில் சேர்க்கும் பருவம் வந்தவுடன் பள்ளிக்கு அழைத்து சென்று பேர் சொல்லி இருக்கிறார் ..அங்கு தான் தலைமை ஆசிரியர்( என் அப்பாவின் நண்பர் போல) ..முதல் குழந்தைக்கு உன் அப்பா(தாத்தா )பேர் வைச்ச ..இந்த பிள்ளைக்கு உன் மனைவியின் தந்தை பேர்  வைக்கலியான்னு கேட்டு இருக்கார் ...உடனே கூட முத்து குமார் என்று சேர்த்து விட்டார்கள் ..என் அம்மாவின் அப்பா பேர் முத்து சாமி ..

இப்படி பாபு என்று இருந்த நான் பாபு முத்து குமார் ஆகிவிட்டேன் ...எவ்வளோ..... நீள பேர் என்று ஆசிரியர் முதல் நண்பர்கள் வரை ஒரே கிண்டல் ..என் தந்தையிடம் இப்பொழுது கூட கேட்டேன் ..அட போட.....

கரம் சந்த் காந்தி ,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ,லால் கிஷந்த் அத்வானி ,அடல் பிஹாரி வாஜ்பாய் ,லாலு பிரசாத் யாதவ் ..பாரு எல்லாமே மூன்று பேர் உள்ளவர்கள் ..நீயும் ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆளுவாய் என்று கூறினார் ..சரி ..சரி நாட்டை ஆளுறேனோ இல்லையோ வீட்டை (ஒரிஜினல் வீ டுப்பா ) நன்றாக நிர்வகிக்க கத்துகொண்டேன் ..

பதிவுலகை பொறுத்த வரையில் எல்லோராலும் அன்பாக (?)இம்சை அரசன் பாபு என்று அழைக்க பெறுகிறேன் .எல்லோரும் தன் திருவாய் மலர இம்சை என்றும் அழைப்பார்கள் (எப்படி எல்லாம் பில்ட் அப் கொடுக்க வேண்டியது இருக்கு ).பதிவுலகம் வந்தவுடன் முதலில் என் பொண்ணு பேரில் தான் பதிவு எழுதினேன் ..சீ ..சீ ..பதிவு இல்ல பின் காலத்தில் பொன் ஏட்டில் பதிக்க கூடிய வரலாற்று நிகழ்வுகளை எழுதினேன் .

அப்பொழுது இரண்டு எதிரிகள் (நண்பர்கள் )"அடை மொழி பேர் வைச்ச்சவங்க யாரும் அழிஞ்சு போனதா சரித்திரம் இல்லை "அதனால் நீயும் அட மொழி பேர் வைன்னு சொன்னாங்க ...ஆமாங்க அந்த நண்பர்கள் ஒருத்தன் சிரிப்பு போலீஸ் ரமேஷ் ...!இன்னொர்த்தர் டெர்ரர் பாண்டி .இவங்க எல்லாம் பிரபல பதிவர்கள் நீயும் பிரபல பதிவர் ஆகணுமா வேண்டாமா என்று கேட்டாங்க .நானும் பதிவே எழுதாம பிரபலம் ஆக வழி இருக்கான்னு கேட்டேன் ..உடனே தான் இந்த பேர் எனக்கு ரொம்ப சரியாக இருக்கும் என்று இன்று முதல் நீ இம்சை அரசன் பாபு .என்று அழைக்கபடுவாய் என்று பேர் வைத்தார்கள் .இந்த ரெண்டு பேரும் தான் என் பேருக்கு முன்னாடி "இம்சை அரசன் "வைக்க சொன்னாக நானும் வைசுட்டேன் .இதுல இந்த டெர்ரர் பாண்டி என் வாய்ல அருவாள் ஒன்னு வைச்சு போட்டோ எடுத்து தந்தான் .

இந்த கத்தி குத்து கந்தன் ,வண்டு முருகன் ,நாய் சேகர்,வாரியர் தேவா மாதிரி ........எனக்கும் "இம்சை அரசன் "பாபுன்னு பேர் வந்து...... ..பேரும் புகழோடும் .....சீரும் சிறப்போடும் பதிவுலக நண்பர்கள் எண்ணை கூவி கூவி அழைகின்றனர் .