Saturday, July 14, 2012

ஆசைக்கு ஒரு பொண்ணு ஆஸ்த்திக்கு ஒரு பையன்


ஆசைக்கு ஒரு பொண்ணு  ஆஸ்த்திக்கு ஒரு பையன் எல்லோரும் நினைப்பது இது தான் .இது என் வாழகையிலும் நடந்தேறிவிட்டது .ஆம் இன்றோடு என் பையன் பிறந்து ஒரு மாதம் ஆகிறது .ஜூன் 14 காலை  10 .59 க்கு மகன் பிறந்தான் சந்தோசமான நாள்களில் இதுவும் ஒன்று .

முதலில் நன்றியை இருவருக்கு தெரிவித்து கொள்கிறேன் .உணவு உலகம் சார் மற்றும் பன்னிகுட்டி இருவருக்கும் .இரு குழந்தைகளுக்கு இடையே இடைவெளி தேவை என்று அரசு அறிவித்தாலும் நான் ரொம்ப நாள் கழித்து தான் மற்றொரு குழந்தை பெற்று கொண்டேன் .ஆம் 7 வருடங்கள் கழித்து முதலில் பெண்குழந்தை அதுவே ஒரு பயம் மறுபடியும் பெண் குழந்தை என்றால் நம்மோட பொருளாதாரத்தில் நல்ல விதமாக குழந்தை வளர்க்க முடியுமா என்ற பயம் .ஒவ்வொரு முறை உணவு உலகம் சாரை சந்திக்கும் பொழுது என் மனதை கரைத்த புண்ணியவான் அவரு .அதில் உள்ள நிறைகளை  பக்குவமாக என் மரமண்டைக்கு புரியும் படி எடுத்து கூறிய விதம் அப்படி .அதே மாதிரி பன்னிகுட்டி ஊருக்கு வரும் பொழுது இன்னொன்னு பெத்துக்கோ மக்கா நாளைக்கு அதுகளுக்கு கஷ்ட்டம் ன்னு வந்தா சொந்த பந்தம் இல்லாம நிக்கும்ன்னு சொல்லி இன்னொண்ண பெத்துக்க வச்சிட்டாங்க இந்த இருவரும் .
அதுவும் ரெண்டாவது பையன் என்ற பொழுது என் சந்தோசத்துக்கு அளவே இல்லை .நண்பர்களுக்கு எல்லார்கிட்டேயும் போன்ல தகவல் சொல்லிட்டேன் (நினைக்கிறேன் ).ஆனா உணவு உலகம் சார் கிட்ட மட்டும் இந்த நிமிடம் வர சொல்லலை .ஒவ்வொரு நாள் இன்னைக்கு சொல்லிடனும்ன்னு நினைச்சு போன் எடுத்தாலும் .அவர்  பொண்ணு  கல்யாணத்துக்கு நான் போக முடியாததை நினைத்து போன் பண்ணாம இருந்துவிடுவேன் .மனதுக்கு கஷ்ட்டமாக  இருக்குது  அதான் ஒரு முடிவோட இருக்கேன் .இனி பையனோட நேர்ல போய் ஆசிர்வாதம் வாங்குறதுன்னு முடிவு எடுத்துட்டேன் .அதுக்கு நாளும் நெருங்கிவிட்டது ,கூடிய விரைவில் அவர் வீட்டுக்கு குடும்பத்துடன் போய் காலில் விழுவது என்று முடிவு செய்தாகிவிட்டது .அனேகாமாக ஜூலை கடைசி வாரத்தில் காலில் விழும் வைபோகம் நடக்கும் .
இது எல்லாம் போக கடந்த மூன்று மாதங்களாக மன அழுத்தம் இருந்த சமையத்தில் போரம் ,கூகிள் ப்ளஸ் வராம அமைதியா இருந்த நேரத்துல  கும்மி நண்பர்கள் பதறி போய் போன் பண்ணி கேக்குறது .என் மன அழுத்ததை  வெகுவாக குறைத்தது என்றே சொல்லுவேன் (ஒவ்வொருவரையும் தனியா பேர் சொல்லலை சண்டைக்கு வர கூடாது ....).
சரி இவ்வளோ சந்தோசத்துக்கு காரணம் உணவு உலகம் சார் ,பன்னிகுட்டி மற்றும் கும்மி நண்பர்கள்ன்னு சொல்லுறீயே அவங்களுக்கு என்ன செய்தன்னு இந்த சிரிப்புபோலிஸ்  கேக்குறான் ..அதுக்காக பன்னிகுட்டி ,கும்மின்னு எல்லாம் என் பையனுக்கு பேர் விடமுடியாதுங்க ..ஜூலை 25 பையனுக்கு பேர் சூட்டும் விழா எங்கள் வீட்டில் தேரூர் ,கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து நடைபெறுகிறது அனைவரும் வர வேண்டும் என்று கட்டளை இடுகிறேன் ..
என்னாது ..என்ன பேரா ?அதான் சொல்லிட்டேன்ல பன்னிகுட்டி ,டெரர் கும்மின்னு பேர் வைக்க முடியாதுன்னு சொன்னேன்ல ...யோவ் பேர சொல்லுயான்னு டெரர் கேக்குறான் பாருங்க ..சரி இதாங்க பேரு
 ராம் பிரணவ் சங்கர் .
உணவு உலகம் சார் பேரு இதுல வருது .நான் அவர் பேர் வைக்கணும்ன்னு நினைச்சு வைக்கலை .ஆண் பிள்ளையாக இருந்தால்  சங்கரன்கோவில உள்ள சங்கர நாராயணர் பேரு விடுறேன்னு நினைத்து இருந்தேன் அதான் இந்த பேரு .
ஆனா கடவுளும் நீ இன்னொரு பிள்ளை வேணும்ன்னு முடிவு எடுக்க காரணமாக இருந்த அவர் பேரு வைக்கணும்ன்னு என்று தான் என் மனதில் இப்படி ஒரு எண்ணத்தை விதைத்தாரோ என்னவோ .? . 
அதில் எனக்கு முழு சந்தோசமே ...

35 comments:

வெளங்காதவன்™ said...

நீண்டா நால் கழித்துத் தங்காளின் தமிழைக் கண்டத்தில் மகிழ்சி!

#மக்கா! ட்ரீட்?

வெளங்காதவன்™ said...

//#மக்கா! ட்ரீட்?///

வாழத்துச் சொல்லாமல் ட்ரீட் கேக்குறியேடா பரதேசி எனும் நண்பர்களுக்கு,

"வாரிசு பொறந்தவுடனே வாழ்த்திவிட்டான் இந்தத் தாத்தா" என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் பேரனுக்கு தங்கத்துல செயின் போடுயா ..அப்புறம் தான் ட்ரீட் ...

வெளங்காதவன்™ said...

//இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் பேரனுக்கு தங்கத்துல செயின் போடுயா ..அப்புறம் தான் ட்ரீட் ...///

வைடூரியத்துக்கு தங்கத்துல செயினா?
அது எம்பேரனுக்கு அவமானம்....

#க்ரிப்பாத்தான் பேசுறனா?

நாய் நக்ஸ் said...

Ayaraathu...
7 yrs...padupatta...
Babu-ku....
Vazhuthukkal.....!!!!!???

TERROR-PANDIYAN(VAS) said...

கும்மி டீம் சார்பாக வாழ்த்துகள்... :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

கும்மி டீம் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணே..

TERROR-PANDIYAN(VAS) said...

இதுக்கு எல்லாம வாழ்த்து சொல்லுவாங்க என்று காழ்புணர்ச்சியுடன் பதில் சொன்ன கொசக்சி பசபுகழ் அவர்களை வண்மையுடன் கண்டிக்கிறேன்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

// பன்னிகுட்டி ஊருக்கு வரும் பொழுது இன்னொன்னு பெத்துக்கோ மக்கா நாளைக்கு அதுகளுக்கு கஷ்ட்டம் ன்னு வந்தா சொந்த பந்தம் இல்லாம நிக்கும்ன்னு//

அப்போ நீங்க இரண்டு பேரும் உக்காந்து டிஸ்கஸ் பண்ண ரூம் போட்டு கொடுத்த மாலுமிக்கு நன்றி சொல்ல மாட்டிங்க..

கொசக்சி பசபுகழ் said...

babu !!

Success full second innings ...,

TERROR-PANDIYAN(VAS) said...

//கடவுளும் நீ இன்னொரு பிள்ளை வேணும்ன்னு முடிவு எடுக்க காரணமாக இருந்த அவர் பேரு வைக்கணும்ன்னு என்று தான் என் மனதில் இப்படி ஒரு எண்ணத்தை விதைத்தாரோ என்னவோ .? //

அப்போ ஏன் பன்னிகுட்டி பெயரை விதைக்கவில்லை?? ஏன்ன அவன் பேரு அவ்வளவு கேவலமான பேரு அப்படினு நீங்க சொன்னத நான் இங்க சொல்ல மாட்டேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

//பெண் குழந்தை என்றால் நம்மோட பொருளாதாரத்தில் நல்ல விதமாக குழந்தை வளர்க்க முடியுமா என்ற பயம் .//

என்ன ஒரு ஆணாதிக்கம். இந்த காலத்தில் பெண் குழந்தை எல்லாம் பெத்தவங்களுக்கு எவ்வளவு உதவியா இருக்கு. பெண் குழந்தைனா எக்ஸ்ட்ரா இரண்டு கரண்டி சாப்பிடுமா? சொல்ல போனா அம்பளை பசங்கதான் அதிகமா தின்பானுங்க....

பெசொவி said...

வாழ்த்துகள், பாபு!
எதிர்கால பிரபல பதிவர் ராம் பிரணவ் சங்கர் அவர்களுக்கும் வாழ்த்துகள்!

(எதிலும் வித்தியாசமாய் யோசிப்போர் சங்கம்)

TERROR-PANDIYAN(VAS) said...

//கூடிய விரைவில் அவர் வீட்டுக்கு குடும்பத்துடன் போய் காலில் விழுவது என்று முடிவு செய்தாகிவிட்டது/

இப்படி எல்லாம் செஞ்சிட்டா மட்டும் எல்லாம் சரியா போய்டுமா? அவரு ரொம்ப கோவகாரு. கொடைக்கானல் போனிங்க, ஊட்டி போனிங்க, கோயம்பத்தூர் போனிங்க. ஆனா பக்கத்தில் இருக்க சங்கர கோவில் போக முடியலை சொன்னா இதை அவரு நம்புவாரா? நெவர்ர்ர்ர்ர்.... :) அட நாய் நக்ஸ் கூட சிதம்பரத்தில் இருந்து அவ்வளவு தூரம் போனாருயா.. :)

TERROR-PANDIYAN(VAS) said...
This comment has been removed by the author.
TERROR-PANDIYAN(VAS) said...

//உணவு உலகம் சார் பேரு இதுல வருது .நான் அவர் பேர் வைக்கணும்ன்னு நினைச்சு வைக்கலை //

பன்னிகுட்டி ராம்சாமில இருக்க ராம் கூட தான் வருது. அதை ஏன் நீங்கள் சொல்லவில்லை? நீங்கள் அரசியல் ஆதாயம் கருதி திட்டம் போட்டு பன்னிகுட்டியின் பெயரை இருட்டடிப்பு செய்து இருக்கிறிர்கள்..

மாலுமி said...

பாபு மக்கா...........வாழ்த்துக்கள் :)

Unknown said...

வாழ்த்துக்கள் சார், உங்களுக்கும் செல்ல மகனுக்கும்.

மாலுமி said...

/// TERROR-PANDIYAN(VAS) said...

// பன்னிகுட்டி ஊருக்கு வரும் பொழுது இன்னொன்னு பெத்துக்கோ மக்கா நாளைக்கு அதுகளுக்கு கஷ்ட்டம் ன்னு வந்தா சொந்த பந்தம் இல்லாம நிக்கும்ன்னு//

அப்போ நீங்க இரண்டு பேரும் உக்காந்து டிஸ்கஸ் பண்ண ரூம் போட்டு கொடுத்த மாலுமிக்கு நன்றி சொல்ல மாட்டிங்க.. ///

நன்றிக்கு பதிலாக.....
சரக்கு வந்து சேந்தது :)))

Madhavan Srinivasagopalan said...

கும்மி டீம் சார்பாக வாழ்த்துகள்... :)

இம்சைஅரசன் பாபு.. said...

//பன்னிகுட்டி ராம்சாமில இருக்க ராம் கூட தான் வருது. அதை ஏன் நீங்கள் சொல்லவில்லை? நீங்கள் அரசியல் ஆதாயம் கருதி திட்டம் போட்டு பன்னிகுட்டியின் பெயரை இருட்டடிப்பு செய்து இருக்கிறிர்கள்..//

ம்ம் ஆமா நான் அத மறந்துட்டேன் பார்த்தியா ? பண்ணிகுட்டின்னு மட்டும் சொல்லி சொல்லி பழக்கம்..ராமசாமி ல ராம் வந்திருக்கு ..ஆண்டவன் கிருபை மக்கா ..எல்லாம் இனியவைஆக நடக்கிறது ..அதிலும் சந்தோசம் தான்

இம்சைஅரசன் பாபு.. said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//கூடிய விரைவில் அவர் வீட்டுக்கு குடும்பத்துடன் போய் காலில் விழுவது என்று முடிவு செய்தாகிவிட்டது/

இப்படி எல்லாம் செஞ்சிட்டா மட்டும் எல்லாம் சரியா போய்டுமா? அவரு ரொம்ப கோவகாரு. கொடைக்கானல் போனிங்க, ஊட்டி போனிங்க, கோயம்பத்தூர் போனிங்க. ஆனா பக்கத்தில் இருக்க சங்கர கோவில் போக முடியலை சொன்னா இதை அவரு நம்புவாரா? நெவர்ர்ர்ர்ர்.... :) அட நாய் நக்ஸ் கூட சிதம்பரத்தில் இருந்து அவ்வளவு தூரம் போனாருயா.. :)//

டேய் ..டேய் .. கொளுத்தி போடாதே பரதேசி ..பரதேசி ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கும்மி டீம் சார்பாக வாழ்த்துகள்... :)

நாய் நக்ஸ் said...

VAREN IRUNGA.....
MAKKAA.....


ITHUKKU ELLAAM
BAAAAAAAAAABU...
PATHIL SOLLALUM....

மாணவன் said...

கும்மி டீம் சார்பாக வாழ்த்துகள்... :)

NaSo said...

கும்மி டீம் சார்பாக வாழ்த்துகள்... :)

வைகை said...

அண்ணே... ட்ரீட் இன்னும் வரல! :-)

உணவு உலகம் said...

வாழ்த்துக்கள் பாபு. என் மகள் திருமணத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் எனக்கிருந்தாலும், உங்களிடம் சில நாட்களுக்கு முன் செல்லில் பேசி நல்ல செய்தி அறிந்து அகமகிழ்ந்தேன்.

உணவு உலகம் said...

//ராம் பிரணவ் சங்கர் //
ராம் பிரணவ சங்கர் நல்லறிவும், நீண்ட ஆயுளும் பெற்று பல்லாண்டு வாழ இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

TERROR-PANDIYAN(VAS) said...

@பாபு

//உங்களிடம் சில நாட்களுக்கு முன் செல்லில் பேசி நல்ல செய்தி அறிந்து அகமகிழ்ந்தேன்.//

கல்யாணாத்துக்கு அப்புறம் போன்ல பேசிட்டு அப்புறம் என்னா பில்டப்புபு... அப்போ பதிவு முழுவதும் பொய்யா.. :P

(எல்லாரும் வாங்க ஆடு சிக்கிடுச்சி)

இம்சைஅரசன் பாபு.. said...

// கல்யாணாத்துக்கு அப்புறம் போன்ல பேசிட்டு அப்புறம் என்னா பில்டப்புபு... அப்போ பதிவு முழுவதும் பொய்யா.. :P //

டேய் கல்யாணத்துக்கு வர முடியாத ரீசன் சொல்லிட்டேன் .. ஆனாலும் மனசுக்கு ஒரு இது .......அதான் வருத்தம் இருக்கும்ல ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கும்மி டீம் சார்பாக வாழ்த்துகள்... :)

பட்டிகாட்டான் Jey said...

வாழ்த்துகள் பாபு.

ஸாதிகா said...

இங்கு கிளிக் செய்து பார்த்து கருத்துக்கூறவும்.நன்றி!

Unknown said...

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com