Tuesday, March 1, 2011

ஜைன்தவி..ஐ ..லவ் ..யூ ....


அண்ணன் லவ் மூடுல இருக்கேன் ..தக்காளி... பன்னிகுட்டி இன்னும் பல பேர் ஒரே காதல் கதை போட்டு தள்ளுறாங்க நானும் என் காதல கதைய எழுதுறேன் ..பார்த்து படிச்சு செத்து தொலைங்க ...

என் ஜைன்தவி ...(சைந்தவி இல்ல) என் பட்டு குட்டி ,என் செல்ல குட்டி காலைல எழுந்தவுடன்  டீ குடிக்கும் பொழுது..! நான் குடிச்சிட்டு கொஞ்சம் டீ உனக்கு தருவேனே..! அந்த எச்ச டீயை நீ குடிச்சுட்டு நீ என் மடி மீது வந்து படுத்து ..என் கன்னத்தில் வந்து ..சீ ..சீ எனக்கு வெக்கம் வெக்கமாக வருது அதை சொல்ல ..

சாபுவுக்கு லீவ்ன்னு சொல்லிட்டு ஜைன்தவியையும் கூட்டிட்டு போயீட்ட ..நான் எப்போதுமே ரெண்டு இட்லி சாப்பிட்டுகிட்டு ஒரு இட்லி தந்தாலும் அதை நல்ல வயிறு முட்ட சாப்பிட்டுகிட்டு ,நான் வேலைக்கு போகும் போது வெளியே வந்து வழி அனுப்பி வைப்பியே...இந்த 15 நாளும் எனக்கு ஒரே போர் ..எப்படி எனக்கு இனி நேரம் போகும் ..

வாழ்க்கை அழகு பாஸ்...அதுவும் ஜைந்தவிங்க கெடைச்ச எல்லா அப்பாகளுக்கும் வாழ்க்கை சொர்க்கம்.(இந்த வரி எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே ..டேய் இம்சை வெளிய வராத அப்படியே உள்ள இரு ..)

யார்கிட்டேயும் பேச பிடிக்கல ... ஜைன்தவி பார்க்காம கண்ணு ரெண்டும் பூத்து போச்சு ..என் கண்ணுகுள்ளே வந்து நிக்கிறியே ..உன் கூட செல்ல சண்டை போடணும் போல இருக்கு ..இப்படி தான் என் மாமனார் எனக்கு தீபவாளிக்கு வாங்கி தந்த பட்டாபட்டிய .நான் கழற்றி போட்டு இருந்த போது அதை நீ எடுத்து போத்திகிட்டு படுத்தியே..! குளிருக்கு இதமா இருக்குன்னு ..நான் கோவமா அதை புடுங்கும் போது ..நீ அதை இழுக்க ..நான் இழுக்க... கடைசில .பட்டாபட்டி பாதி உன்கிட்ட மீதி என்கிட்டே இருந்துச்சு ..கிளிச்சுட்டீயேன்னு நான் பொய் கோவ பட்ட போதும் என் மடில வந்து படுத்தியே... .இந்த பதினைந்து நாளும் என் மடில படுக்க ஆள் இல்லாமல் தலையணை தூக்கி வைச்சிக்கிட்டு இருக்கேனே இந்த கொடுமை ரொம்ப பயங்கரமானது . 

இப்படிதாங்க நானும் ஜைந்தவியும் எப்பொழுதும் மாலை நடை பயிற்சி போவோம் .அவளின் பிடி என் கைகுள்ளேயே இருக்கும் அது அன்பு பிடி..! .ஒரு நாள் இப்படி சேர்ந்து வாக்கிங் போகும் போது நாலு பேர் சேர்ந்து முறைச்சி பார்த்தாங்க .எனக்கு கோபம கொப்பளித்து கொண்டு வந்தது நான் அவர்களை அடிக்க போகும் முன் ..என் செல்லம் ,என் புச்சு குட்டி அவர்களை முறைத்து பார்த்து சத்தம் போட்டாளே பார்க்கணும் ..அது என் செவிக்குள்ளேயே நிக்குது ..

ஒரு நிமிஷம் இருங்க சாபுகிட்டே என் செல்ல குட்டி ,அம்முக்குட்டி ஜைன்தவி சாப்பிட்டாளா  என்னன்னு கேட்டு கிட்டு வரேன் ஏன்னா நான் சாப்பிட்ட மிச்சத்தை சாப்பிட்டே பழக்க பட்டவள் ..

ஜைன்தவி கிடச்ச அப்பாக்களுக்கு... நீங்களும் வீட்டுல இருக்கும் ஜைந்தவிக்கு ஒரு துண்டு இட்லி ,ரொட்டி, எச்ச டீ இப்படி டெய்லி கொடுத்து பாருங்க ..அதோட சுகமே தனி மக்கா ..

ஜைன்தவி கிடைக்காத பன்னாட பரதேசிகளுக்கு ..இழுத்து மூடிக்கிட்டு பொத்திகிட்டு படுத்து தூங்குங்க... ஒரு மாலதி ,ஒரு சந்தியா... இப்படி கெட்ட கெட்ட கனவு வரும் ...

இருங்க ..இருங்க ..டெர்ரர் எதோ கேக்குறான் ..

ஓ ...ஜைன்தவி யாருன்னு கேக்குறியா பாஸ் இதோ ....

                                                                  
                                                 (பட்டாபட்டி ப்ளாக்ல சுட்டது ...) 

ஜைன்தவி என் வீட்டு நாய்க்குட்டி ..நான் குடிச்ச எச்சி டீ குடிக்கலைனா அதுக்கு தூக்கம் வராது ,என் பட்டாபட்டி எடுத்து மூடிக்கிட்டு தான் அது படுத்து தூங்கும் ..மாதம் ஒரு பட்டாபட்டி என் மாமனார் அதுக்காகவே வாங்கி தருகிறார் ..வாக்கிங் போகும் போது நாலு தெருபொருக்கி நாய்கள் அத பின் தொடரும் போது அது விடும் சவுண்ட் ...ஹையோ ..ஹியூ ..அத சொல்ல முடியாது ..என் காதில் தேன் வந்து பாயுது .



டிஸ்க்கி :இது என் பதிவுலக ரோல் மாடல் பட்டாபட்டிக்கு சமர்பிக்குறேன் ...தலைவா நீ கோடு தான் போட்ட ..நான் ரோடே போட்டுட்டேன் . ஹி ..ஹி ..


கழுகின் இன்றைய பதிவு


64 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

செத்தான் வெளியூர்.. ஹா..ஹா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாடி வாடி..சண்டைக்கு வாடி..


இன்றைய ஸ்பெஷல்...
பட்டாபட்டி...Vs வெளியூர்காரன்...

காணத்தவறாதீர்...

சௌந்தர் said...

பட்டாபட்டி.... said...
வாடி வாடி..சண்டைக்கு வாடி..


இன்றைய ஸ்பெஷல்...
பட்டாபட்டி...Vs வெளியூர்காரன்...

காணத்தவறாதீர்...///

வந்துட்டோம் தல நீங்க ஆரம்பியுங்க

செல்வா said...

நானும் வந்திட்டேன் .. எங்கள் அண்ணன் எனது தலைவர் வெளியூர் அண்ணன யாரெல்லாம் கிண்டல் பண்ணிருக்கீங்க ?

sathishsangkavi.blogspot.com said...

எங்கப்பா சண்டை போடறன்னு சொன்னாங்க ஒன்னையும் காணமே...

செல்வா said...

@ ALL
எனது அண்ணன் வெளியூர் வரும் வரையிலும் நான் அவர் சார்பாக சண்டயிடப்போகிறேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன் ..!

( இன்னிக்கு சைந்தவிய கிண்டல் பண்ணினவுங்களுக்கு ஒரு முடிவு கட்டாம போறது இல்லை )

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நானும் வந்திட்டேன் .. எங்கள் அண்ணன் எனது தலைவர் வெளியூர் அண்ணன யாரெல்லாம் கிண்டல் பண்ணிருக்கீங்க ?
//

நானு..நானு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சங்கவி said...

எங்கப்பா சண்டை போடறன்னு சொன்னாங்க ஒன்னையும் காணமே...
//

அது ஒண்ணுமில்லைண்ணா. வெளியூரு, தண்ணி குடிக்க போயிருக்கு போல... விடுங்க.. வரட்டும்.. வரட்டும்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

( இன்னிக்கு சைந்தவிய கிண்டல் பண்ணினவுங்களுக்கு ஒரு முடிவு கட்டாம போறது இல்லை )
//

சிமெண்ட் காயறதுக்குள்ள கட்டுய்யா சீக்கிரம்.. இல்லாட்டி தரிசா போயிடும்..ஹி..ஹி

செல்வா said...

//சிமெண்ட் காயறதுக்குள்ள கட்டுய்யா சீக்கிரம்.. இல்லாட்டி தரிசா போயிடும்..ஹி..ஹி/

சைந்தவி கதைய கிண்டல் பண்ணிக்கிட்டு இப்ப நக்கல் வேறயா ?
வெளியூர் மட்டும் வந்தா உங்க பட்டாபட்டிய உருவிடுவார் ..!!

( நான் மட்டும் சத்தம் போட்டுட்டு இருக்கேனே , அவர் வேற இன்னும்
பாத்ரூமுக்குள்ள உட்கார்ந்துட்டு இருக்காரு , என்ன போட்டு தள்ளுரதுக்குல வந்திடுவாரா )

சௌந்தர் said...

அண்ணன் லவ் மூடுல இருக்கேன் ..தக்காளி... பன்னிகுட்டி இன்னும் பல பேர் ஒரே காதல் கதை போட்டு தள்ளுறாங்க நானும் என் காதல கதைய எழுதுறேன் ..பார்த்து படிச்சு செத்து தொலைங்க .../////

இப்போ நீங்க காதல் மூடு ல இருக்கீங்க தெரியுது ...அதான் நேத்து போரம்ல பேசினோம் ல

எஸ்.கே said...

விலங்கின் மீது இத்தனை நல்லன்பு கொண்ட உள்ளமே! நீவீர் வாழ்க!

Veliyoorkaran said...

:)

செல்வா said...

எங்க அண்ணா வெளியூர் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார் ,
அதனால் இளகிய மனம் உடையவர்கள் கொஞ்சம் அப்படி ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க !

ரொம்ப கோபமா இருக்காரு .. அவருக்கு கோபம் வந்துச்சுனா
எல்லோரையும் கொன்னு கொன்னு வெள்ளாடுவார்!!

Unknown said...

//செத்தான் வெளியூர்.. ஹா..ஹா//

என்னா ஒரு சந்தோசம்!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Veliyoorkaran said... 13

:)

//

யோவ்.. ஸ்மைலி மட்டும் போடுவது, வீரனுக்கு அழகில்லை..

வாய்யா..வா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@வெளியூர்
@கோமாளி செல்வா said...

எங்க அண்ணா வெளியூர் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார் ,
அதனால் இளகிய மனம் உடையவர்கள் கொஞ்சம் அப்படி ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க !

ரொம்ப கோபமா இருக்காரு .. அவருக்கு கோபம் வந்துச்சுனா
எல்லோரையும் கொன்னு கொன்னு வெள்ளாடுவார்!!
//

யோவ்.. வெளியூரு.. பிஞ்சு ஆடு கிடைச்சிருக்கு.. இன்னும் பருவதுக்கே வரலேனு கேள்விப்பட்டேன்..
இந்த பீஸ் ஓ.கேவா?..

ஓ.கேனு நினைச்சா, மாசால மட்டும் ரெடி ப(ன்னி)ண்ணி வை..

இம்சைஅரசன் பாபு.. said...

எல்லோரும் வெளியூர்காரன் ...வெளியூர்காரன் ...சொல்லுறீங்களே ..அவர் யாரு ..இங்க ஒருத்தரு ஸ்மைலீ போட்டுட்டு ..போயிருக்காரே ..அவரு தானா ..?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger கே.ஆர்.பி.செந்தில் said...

//செத்தான் வெளியூர்.. ஹா..ஹா//

என்னா ஒரு சந்தோசம்!!!
//

இருக்காதா சார் பின்னே..

நேத்து முழுக்க, என்னை வெச்சு, சொறிஞ்சு விட்டிருக்கான்.. ஹி..ஹி

Unknown said...

அடங்கொன்னியா அட்ரா அட்ரா!!

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said... 18
எல்லோரும் வெளியூர்காரன் ...வெளியூர்காரன் ...சொல்லுறீங்களே ..அவர் யாரு ..இங்க ஒருத்தரு ஸ்மைலீ போட்டுட்டு ..போயிருக்காரே ..அவரு தானா ..?///

உங்களை எல்லாம் பார்த்தால் எனக்கு பாவமா இருக்குன்னு சொல்றாராம்

செல்வா said...

//யோவ்.. வெளியூரு.. பிஞ்சு ஆடு கிடைச்சிருக்கு.. இன்னும் பருவதுக்கே வரலேனு கேள்விப்பட்டேன்..
இந்த பீஸ் ஓ.கேவா?..

ஓ.கேனு நினைச்சா, மாசால மட்டும் ரெடி ப(ன்னி)ண்ணி வை..

//

என் மேல மட்டும் கைய வச்சா அப்புறம் என்ன நடக்கும்னே தெரியாது..
வெளியூர் அண்ணன் கத்தி எடுக்கப் போயிருக்காரு , அதனால கொஞ்சம் சூதானமா இருந்துகோங்க.

வெளியூர் மட்டும் கத்தி எடுத்திட்டு வந்திட்டா அப்புறம் யாரும் உசுரோட போக முடியாது .. ஹி ஹி ..

( உஸ் .. அவர் மேல கைய வச்சவே எஸ் ஆகிடுவாரு , நான் மட்டும் வந்து வாய கொடுத்திட்டு இருக்கேனே?! )

மாணவன் said...

ஓகே ரைட்டு நடக்கட்டும் நடகட்டும்.... இந்த சைந்தவி இன்னும் என்னல்லோம் பண்ணப்போறாங்களோ??? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைதி அமைதி.....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 24

அமைதி அமைதி.....

//

எங்கேய்யா..அந்த சொம்பு?..

வா..பன்னி.. வா.. நீயே.. ஞாயத்தை கேளு...

மாணவன் said...

சைந்தவியபத்தின பதிவு எங்க சிங்கையின் சிங்கம் தலைவரு பட்டாபட்டி எழுதுனும் அத நாங்க ஆசதீர படிக்கனும்....

இதுமட்டும் நடந்துச்சுனா பிறவிப்பயன் அடைஞ்சமாதிரி ஒரு சந்தோஷம்....

:)

இம்சைஅரசன் பாபு.. said...

//என் மேல மட்டும் கைய வச்சா அப்புறம் என்ன நடக்கும்னே தெரியாது..
வெளியூர் அண்ணன் கத்தி எடுக்கப் போயிருக்காரு , அதனால கொஞ்சம் சூதானமா இருந்துகோங்க. //

எதுக்கு கத்தி ...ஒரு கோடாலி எடுத்துட்டு வர சொல்லேன் ...(நான் டம்மி பீசு மக்கா கோர்த்து விடாதே )

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said... 24
அமைதி அமைதி.....////

வந்துட்டாரு நாட்டாமை ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சொம்பு இல்லேன்னா என்ன தெம்பு இருக்கு.....

நீதிடா.... நேர்மைடா... நாயம்டா...
டேய்ய்ய் சின்ராசு... வரசொல்றா பிராது கொடுத்தவன..... என்றா பஞ்சாயத்து இங்க.....

இம்சைஅரசன் பாபு.. said...

//இதுமட்டும் நடந்துச்சுனா பிறவிப்பயன் அடைஞ்சமாதிரி ஒரு சந்தோஷம்....

:)//

கூடிய விரைவில் ..ஜைன்தவி பார்ட் II..தலைவர் பட்டாபட்டி ப்ளாக்ல வரும் ..நீயும் அந்த பிறவிபயன் அடைவாய் ..

சரி மக்கா பிறவி பயன் எந்த கடைல கிடைக்கும் ..கிலோ எவ்வளவு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓ பிரச்சனையே சின்ராசுதானா.....? என்றா இது.... யார்ரா அது ஜைந்தவி.... நம்மூருக்கு புதுசா வந்திருக்க டீச்சராக்கும்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
@ ALL
எனது அண்ணன் வெளியூர் வரும் வரையிலும் நான் அவர் சார்பாக சண்டயிடப்போகிறேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன் ..!

( இன்னிக்கு சைந்தவிய கிண்டல் பண்ணினவுங்களுக்கு ஒரு முடிவு கட்டாம போறது இல்லை )//////

மொதல்ல போயி ஃபையர் சர்வீச கூட்டிட்டு வா... அப்பால சண்டைய தொடங்குவோம்........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பன்னி
//
நீதிடா.... நேர்மைடா... நாயம்டா...
டேய்ய்ய் சின்ராசு... வரசொல்றா பிராது கொடுத்தவன..... என்றா பஞ்சாயத்து இங்க...
//

ங்கொய்யாலே..
உனக்கும் இருக்குடி ஆப்பு...
நேத்து நான் இல்லாதப்ப, ரத்தம் வரமாறி சொறிஞ்சவன்ல நீயும் ஒருத்தனாமே.. உளவுத்துறை சொல்லுச்சி...

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கோமாளி செல்வா said...
எங்க அண்ணா வெளியூர் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார் ,
அதனால் இளகிய மனம் உடையவர்கள் கொஞ்சம் அப்படி ஓரமா நின்னு வேடிக்கை பாருங்க !

ரொம்ப கோபமா இருக்காரு .. அவருக்கு கோபம் வந்துச்சுனா
எல்லோரையும் கொன்னு கொன்னு வெள்ளாடுவார்!!////////

வரச்சொல்லுய்யா ஜில்லா கலெக்டர....

செல்வா said...

//மொதல்ல போயி ஃபையர் சர்வீச கூட்டிட்டு வா... அப்பால சண்டைய தொடங்குவோம்.......//

நாங்களே ஒரு பயர் , நாங்க எதுக்கு பயர் சர்வீச கூப்பிடனும் ..
சைந்தவிய கிண்டல் பண்ணுரவங்களா எரிச்சிட்டுத்தான் வேற வேலை.

இப்படிக்கு வெளியூர்க்காரரை வெட்டும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டு
அவர் இல்லாத போது சலம்பும் அவரது ரசிகன் .. ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//ஓ ...ஜைன்தவி யாருன்னு கேக்குறியா பாஸ் இதோ ....//

எலேய் பன்னிகுட்டி என்னை காப்பாத்துலேய் மக்கா.......
இதுக்கு மொக்கையன் செல்வாவே பரவா இல்லை அவ்வ்வ்வ்வ்வ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... said...
@பன்னி
//
நீதிடா.... நேர்மைடா... நாயம்டா...
டேய்ய்ய் சின்ராசு... வரசொல்றா பிராது கொடுத்தவன..... என்றா பஞ்சாயத்து இங்க...
//

ங்கொய்யாலே..
உனக்கும் இருக்குடி ஆப்பு...
நேத்து நான் இல்லாதப்ப, ரத்தம் வரமாறி சொறிஞ்சவன்ல நீயும் ஒருத்தனாமே.. உளவுத்துறை சொல்லுச்சி...

:-)////////

ஆமா பொல்லாத பொடலங்கா ஒளவுத்துர...... அறிக்கிரவன் சொறியிரான்.... இதுல போயி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு........

MANO நாஞ்சில் மனோ said...

//அண்ணன் லவ் மூடுல இருக்கேன் ..தக்காளி... பன்னிகுட்டி இன்னும் பல பேர் ஒரே காதல் கதை போட்டு தள்ளுறாங்க நானும் என் காதல கதைய எழுதுறேன் ..பார்த்து படிச்சு செத்து தொலைங்க ...//

ஆரம்பத்திலேயே வார்ன் பன்னி இருந்தும் தெரியாம உள்ளே போயி படிச்சிட்டேனே....
கொய்யால டியூட்டிக்கு வந்த உடனே பல்பை தூக்கி கையில குடுத்துட்டானுகளே.....பொலம்ப வச்சிட்டாணுக.....

சி.பி.செந்தில்குமார் said...

அதானே.. பார்த்தேன்.. பாபுவோட ஆள் பேரு க என ஆரம்பிக்கும்னு பதிவுலகக்கிசு கிசு சொல்லுதேன்னு பார்த்தேன்

இம்சைஅரசன் பாபு.. said...

//அதானே.. பார்த்தேன்.. பாபுவோட ஆள் பேரு க என ஆரம்பிக்கும்னு பதிவுலகக்கிசு கிசு சொல்லுதேன்னு பார்த்தேன்//

யோவ சி. பி .நீ என்னதான் சொல்ல வார ..தக்காளி ஒரு எழவும் புரிய மாட்டுது
அது கிடைக்காம தானே நான் நாய் குட்டிய லவ் பண்ணுறேன் ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

க வுல ஆரம்பிக்குதுன்னா கமலா தானே? நேத்தே கேள்விப்பட்டேன்.. சரியா போச்சு... ஒலகத்துலேயே மொத மொதலா கள்ளக் காதலுக்கு பதிவு போட்டது நம்ம பயலாத்தான் இருக்கும்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடிக்கடி நாய் பொழப்பு நாய் பொழப்பன்னு சொல்லுவியே. அது இதானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்த எச்ச டீயை நீ குடிச்சுட்டு நீ என் மடி மீது வந்து படுத்து ..//

உன் எச்ச டீய குடிச்சும் அது உயிரோட இருக்குதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்டின்னா அந்த சங்கரன்கோவில் பிச்சகாரி நிலைமை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்டின்னா அந்த சங்கரன்கோவில் பிச்சகாரி நிலைமை?////

அதத்தான் உன் அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணியாச்சாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அந்த எச்ச டீயை நீ குடிச்சுட்டு நீ என் மடி மீது வந்து படுத்து ..//

உன் எச்ச டீய குடிச்சும் அது உயிரோட இருக்குதா?////////

அது நீ வளர்த்த ஜந்துவாச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////யார்கிட்டேயும் பேச பிடிக்கல ... ஜைன்தவி பார்க்காம கண்ணு ரெண்டும் பூத்து போச்சு ..//////

க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......... த்தூ............

Anonymous said...

உன் எச்ச டீய குடிச்சும் அது உயிரோட இருக்குதா?//ஹஹா

Anonymous said...

நல்லாருக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// ஒரு மாலதி ,ஒரு சந்தியா... இப்படி கெட்ட கெட்ட கனவு வரும் .../////////

அடப்பன்னாட.... மாலதி, சந்தியா வந்தா அது கெட்ட கனவுதாண்டா !உனக்கு...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டெர்ரர் எதோ கேக்குறான் ..
ஓ ...ஜைன்தவி யாருன்னு கேக்குறியா பாஸ் இதோ ....////////

ஊசி போட்டாச்சா உங்க ஜைந்தவிக்கு.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இப்படி தான் என் மாமனார் எனக்கு தீபவாளிக்கு வாங்கி தந்த பட்டாபட்டிய .நான் கழற்றி போட்டு இருந்த போது அதை நீ எடுத்து போத்திகிட்டு படுத்தியே..!/////////

அப்பவே செத்திருக்கனும் அது.... எப்படி பொழைச்சிது.. ஆச்சர்யமா இருக்கே? இன்னும் ப்ளூ க்ராஸ்ல இருந்து யாரும் வரலியா?

பெசொவி said...

ஜைன்தவி ரொம்ப அழகா இருக்குதே, எப்படி அது இம்சைய லவ் பண்ணுது? #டவுட்டு

வானம் said...

பன்னி, இப்ப என்ன பிரச்சன நடக்குதுன்னு தூக்கிட்டு வந்து உக்காந்துருக்கே, சொம்ப?

வைகை said...

ஏன் மக்கா? சைந்தவிக்கு அது வச்சேன் இதி வெச்சேன்னு சொல்ற..ஆனா வயித்தப்பார்த்தா ஒட்டிப்போய் இருக்கு?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
க வுல ஆரம்பிக்குதுன்னா கமலா தானே? நேத்தே கேள்விப்பட்டேன்.. சரியா போச்சு... ஒலகத்துலேயே மொத மொதலா கள்ளக் காதலுக்கு பதிவு போட்டது நம்ம பயலாத்தான் இருக்கும்....///


பன்னி... கமலான்னு சொன்னா இன்னொரு ஆளுக்கு கோவம் வரப்போகுது!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////டெர்ரர் எதோ கேக்குறான் ..
ஓ ...ஜைன்தவி யாருன்னு கேக்குறியா பாஸ் இதோ ....////////

ஊசி போட்டாச்சா உங்க ஜைந்தவிக்கு.....//


இது பெண் நாய்... ஊசியெல்லாம் ஆண் நாய்க்குத்தான்..(அப்பிடியா?.தெரியல...)

தினேஷ்குமார் said...

தலைப்ப பார்க்கும் போதே படிக்காதே படிக்காதேன்னு சொன்னனே கேட்டியா சிபில் இப்ப பாரு என்ன ஆச்சுன்னு .. டேய் விடு விடு நான் பட்டாபட்டிஎல்லாம் போடுறதில்லை .... ஹைஹையோயோயோ......

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா :-))

TERROR-PANDIYAN(VAS) said...

சொந்த பெண் பிறந்த நாளுக்கு ஒரு பதிவு போடவில்லை. இவருக்கு எல்லம் ஒரு ப்ளளளளக்கு... அதுல பதிவு போட வீட்டுல இருந்து கிளம்பிவர ஒரு காரு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

அதுவும் நீல கலர் புது காரு... :)

வாழ்த்துகள் ஹரினி... :)

சாமக்கோடங்கி said...

சூப்பர் பா...

"ஜைன்தவி".....

பேரு நல்லா தான் இருக்கு..

பேரு வெச்சியே அதுக்கு சோறு வெச்சியா..

பாரு வயிறேல்லாம் ஒட்டிப்போய் கெடக்கு..

மாணவன் said...

குட்டி தேவதை ஹரினிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

arul said...

eppadi ippadillam