Thursday, March 17, 2011

அடை மொழி பேர்....!



                                  
                                                                     
                               (இவர்கள் வரிசையில் "இம்சை அரசன் பாபு "...)


தற்பொழுது நாட்டுக்கு ரொம்ப அவசியமான பதிவு ஒன்னு எழுதனம்ன்னு பதிவுலக நண்பர்கள் ..எல்லோரும் கெஞ்சி கேட்டு கொள்வதால் இந்த பதிவை எழுதுகிறேன் ..அதிலும் நம்ம சௌந்தர் என் காலில் விழுந்து கெஞ்சி கேட்டதால் வேறு வழி இல்லாமல் இதை எழுதுகிறேன் ,,ஹி ..ஹி ..புரட்சி தலைவி அம்மா மாதிரி என் மனது யாரவது காலில் விழுந்தால் உடனே அவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்யும் மனது உள்ளவன் ...
டேய் எதுக்கு இவ்வளவு பிலாகானம் கொடுக்குற ..முதல் ல நீ என்ன பதிவு எழுத போற அத சொல்லு  என்கிறீர்களா  ..அதாங்க எதோ பெயர் காரணம் சொல்லுனுமாம்லா ..அத பத்தி தான் ..

இப்ப இருக்குற ஹிந்தி நடிகர்கள் ஷாருக்கான் ..சல்மான் கான் ..அமிர்கான் ...பாராஹ் கான் ..அது மாதிரி தான் எனக்கு பேர் வைகனும்ன்னு நினைசிருப்பாங்க போல என் பெற்றோர்கள் ...நான் பிறக்கும் பொழுது இவர்கள் பிரபலம் ஆகவில்லை ..அதனால் ..

நேதாஜி ...நேருஜி ..மாதிரி பாபுஜி ...அது என்ன ஜி (சீ .அயோக்ய பயலே யார் கூட கம்பேர் பண்ணுற உன்னை )இல்லை மக்கா இப்படி நாட்டுக்காக உழைத்த நல்லவர்கள் போல ..என் மகனும் உழைக்கணும்ன்னு பாபுன்னு பேர் வெச்சாங்கன்னு ....நான் சொல்லுவேன் .!.ஆனா அதை நீங்க நம்ப மாட்டீங்க ...எதோ என் ஆச்சி (பாட்டி )பேர் பாப்பாத்தி அதனால தான் உன் பேரு பாபுன்னு விட்டுருக்காங்கன்னு யாரோ உங்க கிட்ட தவறான தகவல் தந்ததை தான் நீங்க நம்புவீங்க ...சரி விடுங்க .பாபு என்ற பேர் அப்படியே இருக்கட்டும்ன்னு விட வேண்டியது தானே என் அப்பா ...

அப்பவே எங்க அப்பா "பெண்கள் நாட்டின் கண்கள்"என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் ....பள்ளியில் சேர்க்கும் பருவம் வந்தவுடன் பள்ளிக்கு அழைத்து சென்று பேர் சொல்லி இருக்கிறார் ..அங்கு தான் தலைமை ஆசிரியர்( என் அப்பாவின் நண்பர் போல) ..முதல் குழந்தைக்கு உன் அப்பா(தாத்தா )பேர் வைச்ச ..இந்த பிள்ளைக்கு உன் மனைவியின் தந்தை பேர்  வைக்கலியான்னு கேட்டு இருக்கார் ...உடனே கூட முத்து குமார் என்று சேர்த்து விட்டார்கள் ..என் அம்மாவின் அப்பா பேர் முத்து சாமி ..

இப்படி பாபு என்று இருந்த நான் பாபு முத்து குமார் ஆகிவிட்டேன் ...எவ்வளோ..... நீள பேர் என்று ஆசிரியர் முதல் நண்பர்கள் வரை ஒரே கிண்டல் ..என் தந்தையிடம் இப்பொழுது கூட கேட்டேன் ..அட போட.....

கரம் சந்த் காந்தி ,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ,லால் கிஷந்த் அத்வானி ,அடல் பிஹாரி வாஜ்பாய் ,லாலு பிரசாத் யாதவ் ..பாரு எல்லாமே மூன்று பேர் உள்ளவர்கள் ..நீயும் ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆளுவாய் என்று கூறினார் ..சரி ..சரி நாட்டை ஆளுறேனோ இல்லையோ வீட்டை (ஒரிஜினல் வீ டுப்பா ) நன்றாக நிர்வகிக்க கத்துகொண்டேன் ..

பதிவுலகை பொறுத்த வரையில் எல்லோராலும் அன்பாக (?)இம்சை அரசன் பாபு என்று அழைக்க பெறுகிறேன் .எல்லோரும் தன் திருவாய் மலர இம்சை என்றும் அழைப்பார்கள் (எப்படி எல்லாம் பில்ட் அப் கொடுக்க வேண்டியது இருக்கு ).பதிவுலகம் வந்தவுடன் முதலில் என் பொண்ணு பேரில் தான் பதிவு எழுதினேன் ..சீ ..சீ ..பதிவு இல்ல பின் காலத்தில் பொன் ஏட்டில் பதிக்க கூடிய வரலாற்று நிகழ்வுகளை எழுதினேன் .

அப்பொழுது இரண்டு எதிரிகள் (நண்பர்கள் )"அடை மொழி பேர் வைச்ச்சவங்க யாரும் அழிஞ்சு போனதா சரித்திரம் இல்லை "அதனால் நீயும் அட மொழி பேர் வைன்னு சொன்னாங்க ...ஆமாங்க அந்த நண்பர்கள் ஒருத்தன் சிரிப்பு போலீஸ் ரமேஷ் ...!இன்னொர்த்தர் டெர்ரர் பாண்டி .இவங்க எல்லாம் பிரபல பதிவர்கள் நீயும் பிரபல பதிவர் ஆகணுமா வேண்டாமா என்று கேட்டாங்க .நானும் பதிவே எழுதாம பிரபலம் ஆக வழி இருக்கான்னு கேட்டேன் ..உடனே தான் இந்த பேர் எனக்கு ரொம்ப சரியாக இருக்கும் என்று இன்று முதல் நீ இம்சை அரசன் பாபு .என்று அழைக்கபடுவாய் என்று பேர் வைத்தார்கள் .இந்த ரெண்டு பேரும் தான் என் பேருக்கு முன்னாடி "இம்சை அரசன் "வைக்க சொன்னாக நானும் வைசுட்டேன் .இதுல இந்த டெர்ரர் பாண்டி என் வாய்ல அருவாள் ஒன்னு வைச்சு போட்டோ எடுத்து தந்தான் .

இந்த கத்தி குத்து கந்தன் ,வண்டு முருகன் ,நாய் சேகர்,வாரியர் தேவா மாதிரி ........எனக்கும் "இம்சை அரசன் "பாபுன்னு பேர் வந்து...... ..பேரும் புகழோடும் .....சீரும் சிறப்போடும் பதிவுலக நண்பர்கள் எண்ணை கூவி கூவி அழைகின்றனர் .

Tuesday, March 1, 2011

ஜைன்தவி..ஐ ..லவ் ..யூ ....


அண்ணன் லவ் மூடுல இருக்கேன் ..தக்காளி... பன்னிகுட்டி இன்னும் பல பேர் ஒரே காதல் கதை போட்டு தள்ளுறாங்க நானும் என் காதல கதைய எழுதுறேன் ..பார்த்து படிச்சு செத்து தொலைங்க ...

என் ஜைன்தவி ...(சைந்தவி இல்ல) என் பட்டு குட்டி ,என் செல்ல குட்டி காலைல எழுந்தவுடன்  டீ குடிக்கும் பொழுது..! நான் குடிச்சிட்டு கொஞ்சம் டீ உனக்கு தருவேனே..! அந்த எச்ச டீயை நீ குடிச்சுட்டு நீ என் மடி மீது வந்து படுத்து ..என் கன்னத்தில் வந்து ..சீ ..சீ எனக்கு வெக்கம் வெக்கமாக வருது அதை சொல்ல ..

சாபுவுக்கு லீவ்ன்னு சொல்லிட்டு ஜைன்தவியையும் கூட்டிட்டு போயீட்ட ..நான் எப்போதுமே ரெண்டு இட்லி சாப்பிட்டுகிட்டு ஒரு இட்லி தந்தாலும் அதை நல்ல வயிறு முட்ட சாப்பிட்டுகிட்டு ,நான் வேலைக்கு போகும் போது வெளியே வந்து வழி அனுப்பி வைப்பியே...இந்த 15 நாளும் எனக்கு ஒரே போர் ..எப்படி எனக்கு இனி நேரம் போகும் ..

வாழ்க்கை அழகு பாஸ்...அதுவும் ஜைந்தவிங்க கெடைச்ச எல்லா அப்பாகளுக்கும் வாழ்க்கை சொர்க்கம்.(இந்த வரி எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே ..டேய் இம்சை வெளிய வராத அப்படியே உள்ள இரு ..)

யார்கிட்டேயும் பேச பிடிக்கல ... ஜைன்தவி பார்க்காம கண்ணு ரெண்டும் பூத்து போச்சு ..என் கண்ணுகுள்ளே வந்து நிக்கிறியே ..உன் கூட செல்ல சண்டை போடணும் போல இருக்கு ..இப்படி தான் என் மாமனார் எனக்கு தீபவாளிக்கு வாங்கி தந்த பட்டாபட்டிய .நான் கழற்றி போட்டு இருந்த போது அதை நீ எடுத்து போத்திகிட்டு படுத்தியே..! குளிருக்கு இதமா இருக்குன்னு ..நான் கோவமா அதை புடுங்கும் போது ..நீ அதை இழுக்க ..நான் இழுக்க... கடைசில .பட்டாபட்டி பாதி உன்கிட்ட மீதி என்கிட்டே இருந்துச்சு ..கிளிச்சுட்டீயேன்னு நான் பொய் கோவ பட்ட போதும் என் மடில வந்து படுத்தியே... .இந்த பதினைந்து நாளும் என் மடில படுக்க ஆள் இல்லாமல் தலையணை தூக்கி வைச்சிக்கிட்டு இருக்கேனே இந்த கொடுமை ரொம்ப பயங்கரமானது . 

இப்படிதாங்க நானும் ஜைந்தவியும் எப்பொழுதும் மாலை நடை பயிற்சி போவோம் .அவளின் பிடி என் கைகுள்ளேயே இருக்கும் அது அன்பு பிடி..! .ஒரு நாள் இப்படி சேர்ந்து வாக்கிங் போகும் போது நாலு பேர் சேர்ந்து முறைச்சி பார்த்தாங்க .எனக்கு கோபம கொப்பளித்து கொண்டு வந்தது நான் அவர்களை அடிக்க போகும் முன் ..என் செல்லம் ,என் புச்சு குட்டி அவர்களை முறைத்து பார்த்து சத்தம் போட்டாளே பார்க்கணும் ..அது என் செவிக்குள்ளேயே நிக்குது ..

ஒரு நிமிஷம் இருங்க சாபுகிட்டே என் செல்ல குட்டி ,அம்முக்குட்டி ஜைன்தவி சாப்பிட்டாளா  என்னன்னு கேட்டு கிட்டு வரேன் ஏன்னா நான் சாப்பிட்ட மிச்சத்தை சாப்பிட்டே பழக்க பட்டவள் ..

ஜைன்தவி கிடச்ச அப்பாக்களுக்கு... நீங்களும் வீட்டுல இருக்கும் ஜைந்தவிக்கு ஒரு துண்டு இட்லி ,ரொட்டி, எச்ச டீ இப்படி டெய்லி கொடுத்து பாருங்க ..அதோட சுகமே தனி மக்கா ..

ஜைன்தவி கிடைக்காத பன்னாட பரதேசிகளுக்கு ..இழுத்து மூடிக்கிட்டு பொத்திகிட்டு படுத்து தூங்குங்க... ஒரு மாலதி ,ஒரு சந்தியா... இப்படி கெட்ட கெட்ட கனவு வரும் ...

இருங்க ..இருங்க ..டெர்ரர் எதோ கேக்குறான் ..

ஓ ...ஜைன்தவி யாருன்னு கேக்குறியா பாஸ் இதோ ....

                                                                  
                                                 (பட்டாபட்டி ப்ளாக்ல சுட்டது ...) 

ஜைன்தவி என் வீட்டு நாய்க்குட்டி ..நான் குடிச்ச எச்சி டீ குடிக்கலைனா அதுக்கு தூக்கம் வராது ,என் பட்டாபட்டி எடுத்து மூடிக்கிட்டு தான் அது படுத்து தூங்கும் ..மாதம் ஒரு பட்டாபட்டி என் மாமனார் அதுக்காகவே வாங்கி தருகிறார் ..வாக்கிங் போகும் போது நாலு தெருபொருக்கி நாய்கள் அத பின் தொடரும் போது அது விடும் சவுண்ட் ...ஹையோ ..ஹியூ ..அத சொல்ல முடியாது ..என் காதில் தேன் வந்து பாயுது .



டிஸ்க்கி :இது என் பதிவுலக ரோல் மாடல் பட்டாபட்டிக்கு சமர்பிக்குறேன் ...தலைவா நீ கோடு தான் போட்ட ..நான் ரோடே போட்டுட்டேன் . ஹி ..ஹி ..


கழுகின் இன்றைய பதிவு